Skip to main content

21 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ரூபாய் நோட்டு வெளியீடு

உற்பத்தி செலவு அதிகரித்ததால், ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி, கடந்த 1994-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அதுபோல், 2 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி, 1995-ம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டது
. அதன்பிறகு, இந்த மதிப்பில் நாணயங்கள்தான் அச்சிடப்பட்டன.

இந்நிலையில், 21 ஆண்டுகளுக்கு பிறகு, புதிய ஒரு ரூபாய் நோட்டு அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீநாத்ஜி கோவிலில் வைத்து, மத்திய நிதித்துறை செயலாளர் ராஜீவ் மெரிஷி இந்த புதிய நோட்டை வெளியிட்டார்.


மற்ற ரூபாய் நோட்டுகளில், ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்து இருக்கும். ஆனால், இந்த நோட்டில் மத்திய நிதித்துறை செயலாளரின் கையெழுத்து இரு மொழிகளில் இடம்பெற்றுள்ளது. இந்த புதிய நோட்டுடன், புழக்கத்தில் உள்ள பழைய ஒரு ரூபாய் நோட்டுகளும் செல்லும்.

110 மைக்ரான் திண்மை கொண்ட இந்த நோட்டு, முன்பக்கத்திலும், பின்பக்கத்திலும் இளஞ்சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் உள்ளது. நீர்க்குறியீட்டில், அசோகர் தூண் சின்னமும், வலதுபக்க ஓரத்தில் “பாரத்” என்ற வார்த்தை இந்தியில் மறைவாகவும் காணப்படுகிறது.

Popular posts from this blog

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

ஆசிரியர் இல்லாமல் நாம் இல்லை!-முனைவர் மா.தச.பூர்ணாச்சாரி,வழக்கறிஞர், மதுரை.94432 66674.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பள்ளிப்பருவம் முக்கியமானது. முதன் முதலாக தாய் தந்தையுடன் சென்று, புத்தாடை அணிந்து, ஆசிரியரை வணங்கி, புத்தரிசி அல்லது நெல்லில் எழுத்தை எழுதத் துவங்கிய நாளை மறக்க இயலாது.வெளி உலகைப் புரிந்து கொள்ளவும், தாய் தந்தையரால் தர முடியாத கல்வி மற்றும் பயிற்சியினை கல்வி மூலமாக ஆசிரியரால்