Skip to main content

"வாட்ஸ்-அப்'பில் பிளஸ் 2 வினாத்தாள்: தேர்வு மையத்தில் 7 ஆசிரியர்கள் பணிக்கு வராதது ஏன்?

"வாட்ஸ்-அப்'பில் பிளஸ் 2 வினாத்தாள்: தேர்வு மையத்தில் 7 ஆசிரியர்கள் பணிக்கு வராதது ஏன்? அதிகாரிகள் விசாரணை
பிளஸ் 2 வினாத்தாளை கட்செவி அஞ்சல் (வாட்ஸ்-அப்) மூலம் வெளியிட்ட விவகாரத்தில், ஒரே நாளில் 7 ஆசிரியர்கள் தேர்வுப் பணிக்கு வராதது ஏன் என்பது தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை
நடத்தி வருகின்றனர்.
பிளஸ் 2 வினாத்தாளை கட்செவி அஞ்சல் மூலம் வெளியிட்ட ஆசிரியருக்கு ஒசூரில் உள்ள குறிப்பிட்ட அந்தத் தேர்வு மையத்தில் பணி வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
அந்தத் தேர்வு மையத்தில் தேர்வுப் பணிக்கு வர வேண்டிய 7 ஆசிரியர்கள் ஒரே நாளில் பணிக்கு வராததாலேயே கூடுதல் ஆசிரியர்கள் பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அந்தக் கூடுதல் ஆசிரியர்களில் ஒருவர்தான் பிளஸ் 2 கணித வினாத்தாளை படம் எடுத்து கட்செவி அஞ்சல் மூலம் வெளியில் அனுப்பியுள்ளார்.
வழக்கமாக, தேர்வுப் பணிகளுக்கு ஓரிரு ஆசிரியர்கள் தவிர்க்க இயலாத காரணங்களால் பணிக்கு வராமலிருப்பது வழக்கமானதுதான். ஆனால், ஒரே நாளில் 7 ஆசிரியர்கள் பணிக்கு வராமல் இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் இது தொடர்பாகவும் கல்வித் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
பிளஸ் 2 கணிதத் தேர்வில் தேர்வறை கண்காணிப்பாளராகப் பணியாற்றிய தனியார் பள்ளி ஆசிரியர் மகேந்திரன் கட்செவி அஞ்சல் மூலம் வினாத்தாளை சக ஆசிரியர்களான கோவிந்தன், உதயகுமார், கார்த்திகேயன் ஆகியோருக்கு அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக 4 ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டனர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா