Skip to main content

பிளஸ் 2 வேளாண் தேர்வில் 59 மதிப்பெண் போச்சு


தொழிற்கல்வியில், வேளாண் செயல்முறை கள் பாடத்துக்கு, 'தியரி' தேர்வை, தமிழகம் முழுவதும், 12 ஆயிரம் பேர் நேற்று எழுதினர். இந்தப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றால், பி.எஸ்.சி., அக்ரி மற்றும் கால்நடை மருத்
துவ கல்லூரி பட்டப்படிப்புக்கு செல்லலாம். ஆனால், வேளாண் செயல்முறைகள் பாட வினாத்தாளில், 59 மதிப்பெண்களுக்கான, 13 வினாக்கள் மாணவர்களுக்கு புரியாத வகையில் இடம் பெற்றுள்ளன.
இதுகுறித்து, தமிழக வேளாண் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: 'அக்ரி' மாணவர்களுக்கு, 'புளூ பிரின்ட்' மற்றும் புத்தகத்தின் பின்புறத்தில் இல்லாத, புதிய கேள்விகள் இடம் பெற்றுள்ளன. உதாரணமாக, 45வது கேள்வியில், 'சொலனேசிய' குடும்பப் பயிர் கலை மற்றும் உர நிர்வாகம் கேட்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு, 'சொலனேசியா' என்றால் தெரியாது. நன்செய் பயிர் குறித்து, 47வது கேள்வி இடம் பெற்றுள்ளது. ஆனால், தோட்டக்கால் பயிர் தான் மாணவர்கள் கற்றுள்ளனர், என்றனர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா