Skip to main content

பிளஸ் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: மேலும் 4 தனியார் பள்ளி ஆசிரியர்கள் கைது


 ஓசூரில், பிளஸ் 2 கணித வினாத்தாள், 'வாட்ஸ் அப்'பில், வெளியானது தொடர்பாக, தனியார் பள்ளியைச் சேர்ந்த மேலும் நான்கு ஆசிரியர்களை, போலீசார் கைது செய்தனர்.

ஓசூரில், கடந்த, 18ம் தேதி நடந்த, பிளஸ் 2 கணிதத் தேர்வின் போ
து, தனியார் பள்ளியில் தேர்வு கண்காணிப்பாளராக பணியாற்றிய, தனியார் பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன் ஆகியோர், தன் சக ஆசிரியர்களான உதயகுமார், கார்த்திகேயன் ஆகியோருக்கு, கணித வினாத்தாளை மொபைல்போனில் புகைப்படம் எடுத்து, அதை, 'வாட்ஸ் அப்' மூலம் அனுப்பினர். இதையறிந்த, எஸ்.எஸ்.ஏ., - சி.இ.ஓ., பொன்குமார் தலைமையிலான பறக்கும் படையினர், அவர்களிடம் இருந்து மொபைல்போனை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, சி.இ.ஓ., ராமசாமி கொடுத்த புகாரின் படி, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, நான்கு ஆசிரியர்களையும் கைது செய்தனர்.
அவர்களை, கடந்த, 24ம் தேதி, இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரித்த போலீசார், நேற்று முன்தினம், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவ்விவகாரம் தொடர்பாக, ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் வேதகன் தன்ராஜ் உட்பட, ஐந்து கல்வித்துறை அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், போலீஸ் காவலில் உள்ள நான்கு ஆசிரியர்களிடம் நடத்திய விசாரணையில், பிளஸ் 2 வினாத்தாள், 'வாட்ஸ் அப்'பில் வெளியானது தொடர்பாக, மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று மாலை, தனியார் பள்ளி ஆசிரியர்கள் சஞ்சீவ், மைக்கேல் ராஜ், விமல்ராஜ், கவிதா ஆகிய நான்கு பேரை, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்காக, கிருஷ்ணகிரி அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆசிரியர் மகேந்திரன் மூலமாக அனுப்பப்பட்ட வினாத்தாள், வாட்ஸ் அப் மூலம் தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், இது தொடர்பாக, மற்ற ஆசிரியர்கள் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரித்தனர். இதைத் தொடர்ந்து, ஓசூர் ஜே.எம்., 2 நீதிபதி சுரேஷ்குமார் முன் ஆஜர்படுத்தப்பட்ட ஆசிரியர்கள் நான்கு பேரும், சிறையில் அடைக்கப்பட்டனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு