Skip to main content

பிளஸ் 2 தேர்வு: வேதியியல் பாடத்தில் 2 ஒரு மதிப்பெண் வினாக்களில் பிழை



பிளஸ் 2 வேதியியல் பாடத் தேர்வில் ஒரு மதிப்பெண் பகுதியில் 2 வினாக்கள் பிழையுடன் இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 தேர்வில் திங்கள்கிழமை வேதியியல், கணக்குப் பதிவியல்
பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது.

வேதியியல் பாடம் ஏ வகை வினாத்தாள் வரிசையில் 10-ஆவது கேள்வி, 22-ஆவது கேள்வி ஆகியவை பிழையுடன் இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
 அணு வேதியியல், வெப்ப இயக்கவியல் பகுதிகளிலிருந்து இந்தக் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

10-ஆவது கேள்வி யுரேனியம் அணுத்துகள் ஈயத்துடன் வேதியியல் வினைபுரியும்போது வெளியிடப்படும் ஆல்பா, பீட்டா கதிர்களின் எண்ணிக்கை தொடர்பானது. இதில் ஈயத்தின் மதிப்பு 206 என்று இருப்பதற்கு பதிலாக 208 என வழங்கப்பட்டுள்ளது. இதனால் சரியான விடை கிடைக்காது என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.


அதேபோல், வெப்ப இயக்கவியல் தொடர்பான 22-ஆவது கேள்வியில் கொடுக்கப்பட்டிருந்த 4 விடைகளுமே தவறானவை. இந்தப் பகுதியில் விடையாக +0.032ஒஓ-1 என்று கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

சற்று கடினமான கேள்வித்தாள்: வேதியியல் பாட வினாத்தாள் இந்த ஆண்டு சற்று கடினமானதாகவே இருந்தது என மாணவர்கள் தெரிவித்தனர்.
 ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினமானவையாக இருந்தன. பிற பகுதி வினாக்களும் எதிர்பார்க்காத பகுதிகளிலிருந்து வந்திருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

நன்றாகப் படிக்கும் மாணவர்கள் கூட வேதியியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெறுவது சிரமம் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

காப்பியடித்ததாக 38 பேர் சிக்கினர்: வேதியியல் பாடத்தில் காப்பியடித்ததாக மாநிலம் முழுவதும் 38 பேர் சிக்கினர். பிளஸ் 2 கணிதப் பாடத்தில் வாட்ஸ்-அப் மூலம் வினாத்தாளைப் படம் எடுத்து அனுப்பி, பதில்களைப் பெறுவதற்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் முயற்சி செய்ததால் இந்தத் தேர்வுக்கான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்ததாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல், கணக்குப் பதிவியல் தேர்வில் காப்பியடித்ததாக 24 பேர் பிடிபட்டனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்