Skip to main content

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 16-இல் தொடக்கம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 16-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன.
இதற்காக தமிழகம் முழுவதும் 66 விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்படஉள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் 40ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள்
திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்


பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5-ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தேர்வை 2,377
மையங்களில் தனித்தேர்வர்கள் 42 ஆயிரம் பேர் உள்பட மொத்தம் 8.86 லட்சம்
மாணவர்கள் எழுதுகின்றனர்.


தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் வெள்ளிக்கிழமையோடு
நிறைவடைந்தன. இந்த இரண்டு தாள்களுக்குரிய விடைத்தாள்கள் தேர்வு
மையங்களிலிருந்து, அந்தந்த கல்வி மாவட்டங்களில் உள்ள விடைத்தாள் காப்புமையங்களுக்கு பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்டன.அடுத்த வாரத்தில் விடைத்தாள்கள் இந்த மையங்களிலிருந்து விடைத்தாள்
மதிப்பீட்டு மையங்களுக்கும் உரிய பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட உள்ளன.

மொழிப்பாடங்கள் உள்பட அனைத்துப் பாடங்களுக்கான விடைத்தாள்களும் வெவ்வேறு மாவட்டங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டு திருத்தப்பட உள்ளன.


விடைத்தாள் திருத்துவது தொடர்பாக அதிகாரிகள் கூறியது:
இந்த ஆண்டு பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 16-இல் தொடங்கப்படஉள்ளன. ஒரு கல்வி மாவட்டத்துக்கு ஒரு மையம் வீதம் 66 மையங்கள் அமைக்கப்படஉள்ளன.
மார்ச் 31-ஆம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடைபெறுகிறது. விடைத்தாள்
திருத்தும் பணிகள் தேர்வு முடிவதற்கு முன்னதாகவே தொடங்குவதால், ஏப்ரல்30-ஆம் தேதிக்குள் விடைத்தாள்கள் அனைத்தும் திருத்தப்பட்டு, அந்த
மையங்களிலிருந்து மதிப்பெண்கள் இணையதளம் வாயிலாகப் பெறப்படும் என அவர்கள்
தெரிவித்தனர்.
தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் மொழிப்பாடத் தேர்வுகளை
எழுதியிருப்பதால், அந்த விடைத்தாள்களைத் திருத்துவதற்கு மட்டும் நீண்ட
நாள்கள் ஆகும். பிற பாடங்களுக்கான விடைத்தாள்கள் சில நாள்களில்
திருத்தப்படும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

விடைத்தாள்களின் முகப்புச் சீட்டில் மாணவர்களின் பெயர், பதிவு எண்,
புகைப்படம், ரகசிய பார்கோடு எண் ஆகியவை அச்சிடப்பட்டுள்ளன. விடைத்தாள்திருத்தப்படுவதற்கு முன்பாக, முகப்புச் சீட்டின் பிற பகுதிகள்
நீக்கப்பட்டு, ரகசிய பார்கோடு எண் உள்ள பகுதி மட்டுமே விடைத்தாளுடன்
வழங்கப்படும். இதன்மூலம், விடைத்தாளைத் திருத்தும் ஆசிரியர்களுக்கே கூடசம்பந்தப்பட்ட விடைத்தாள் எந்த மாணவருடையது என்பது தெரியாது.

விடைத்தாள் திருத்தப்பட்ட பிறகு, அந்த பார்கோடு எண்ணின் மூலம்
சம்பந்தப்பட்ட மாணவர்களின் பதிவெண்ணை அறிந்து அவர்களுக்குரிய மதிப்பெண்வழங்கப்படும்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா