Skip to main content

குரூப் 1 அலுவலர்கள் நியமனத்திற்கு எதிராக வழக்கு: ஐகோர்ட் நோட்டீஸ்

காத்திருப்போர் பட்டியல் அடிப்படையில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1பணியிடங்களில் நியமிக்கப்பட்டவர்களின் நியமனங்களை ரத்து செய்யக் கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தர விட்டது.மதுரை வழக்கறிஞர் கண்ணன் தாக்கல் செய்த மனு: 
டி.என்.பி.எஸ்.சி., மூலம் குரூப் 1 பணிக்கு தேர்வானவர்களில் (2000--01
பேட்ஜ்) 83 பேரின் தேர்வு செல்லாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆவணங்கள்படி 83 பேரில் 14 பேர் பணியை கைவிட்டு, வேறு பணிக்கு சென்றனர். காத்திருப்போர் பட்டியலில் இருந்த சிலருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.அவர்கள் டி.ஆர்.ஓ.,- ஏ.டி.எஸ்.பி., கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர்களாக பணிபுரிகின்றனர். ஏற்கனவே தேர்வான 83 பேரின் தேர்வு செல்லாது என்ற நிலையில், 14 பேரை எதனடிப்படையில் நியமித்தனர். சுப்ரீம் கோர்ட்டில் 65 பேர் சீராய்வு மனு செய்தனர். தற்போதைய நிலை தொடர சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது.

காத்திருப்போர் பட்டியல், அதில் யார், யாருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்ற விபரங்களை சுப்ரீம் கோர்ட்டில் டி.என்.பி.எஸ்.சி., தெரிவிக்கவில்லை. 14 பேரும் பணியில் தொடர்வது சட்டவிரோதம். காத்திருப்போர் பட்டியல் அடிப்படையில் நியமிக்கப்பட்டு கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர்களாக பணிபுரியும் ஜானகிராமன், பாலமுருகன், முருகேசனை வழக்கு நிலுவையில் இருக்கும்வரை பணிபுரிய தடை விதிக்க வேண்டும். இவர்களைப் போல் நியமிக்கப்பட்டவர்களின் நியமன உத்தரவு செல்லாது என அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி பெஞ்ச் தலைமைச் செயலாளர், பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர், டி.என்.பி.எஸ்.சி., செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி, ஏப்.,1க்கு ஒத்திவைத்தது. மனுதாரரின் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார் ஆஜரானார். 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு