Skip to main content

உலக யோகா தினம்:1 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.

போபால்:ம.பி., தலைநகர் போபா லில், உலக யோகா தினத்தை முன்னிட்டு நடைபெறும் யோகா நிகழ்ச்சியில், 1 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.பா.ஜ.,வைச் சேர்ந்த, சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான ம.பி., யில், உலக யோகா தினமான, ஜூன் 21ம்
தேதியன்று, பள்ளி மாணவ, மாணவியரை கொண்டு, பிரமாண்ட அளவில் யோகா பயிற்சிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. பிரதேச இணை இயக்குனர்கள் மற்றும் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், இதுகுறித்து, மாநில பொதுக் கல்வி துறை அதிகாரி அகர்வால் உத்தரவிட்டு உள்ளார்.தலைநகர் போபாலில் உள்ள, ஜம்பூரி மைதானத்தில், பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில், மாநிலம் முழுவதிலும் இருந்து, 7ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை பயிலும், 1 லட்சம் மாணவ, மாணவியர் கலந்து கொள்கின்றனர்.இவர்கள், ஜூன் 16 முதல் 20ம் தேதி வரை, சிறப்பு யோகா பயிற்சி யாளர் உதவியுடன், யோகா பயிற்சிகளை மேற்கொள்வர்.இதற்கான ஏற்பாடு களை, அனைத்து மாவட்ட ஆட்சிரியர்கள் செய்து வருகின்றனர்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.