Skip to main content

ஏப்ரல் 15 முதல் சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் கே.பழனிசாமி ச
னிக்கிழமை தெரிவித்தார்.
இந்தச் சங்கத்தின் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள சுமார் 40,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு காய்கறி வாங்கவும், சமைக்கவும் தலா ரூ. 1.30-ம், 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 1.40-ம் அரசு வழங்குகிறது. இப்போதுள்ள விலைவாசிக்கு இது உகந்ததாக இல்லை. எனவே, இந்தத் தொகையை ரூ. 5-ஆக உயர்த்த வேண்டும்.
சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம், ஓய்வூதியம் வழங்கவேண்டும். சமையல் உதவியாளர்களுக்கு, சமையலராக பதவி உயர்வு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
இந்தக் கோரிக்கைகளை அரசு ஏற்காவிடில் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் கால
வரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்