Skip to main content

ஏப்ரல் 15 முதல் சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் கே.பழனிசாமி ச
னிக்கிழமை தெரிவித்தார்.
இந்தச் சங்கத்தின் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள சுமார் 40,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு காய்கறி வாங்கவும், சமைக்கவும் தலா ரூ. 1.30-ம், 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 1.40-ம் அரசு வழங்குகிறது. இப்போதுள்ள விலைவாசிக்கு இது உகந்ததாக இல்லை. எனவே, இந்தத் தொகையை ரூ. 5-ஆக உயர்த்த வேண்டும்.
சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம், ஓய்வூதியம் வழங்கவேண்டும். சமையல் உதவியாளர்களுக்கு, சமையலராக பதவி உயர்வு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
இந்தக் கோரிக்கைகளை அரசு ஏற்காவிடில் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் கால
வரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா