Skip to main content

சி.பி.எஸ்.சி. 12–ம் வகுப்பு கணித கேள்வித்தாள் கடினம் என புகார் கருணை மதிப்பெண்கள் வழங்க முடிவு?


மத்திய பள்ளி கல்வி வாரியம் சி.பி.எஸ்.சி., 12–வது வகுப்பு கணித தேர்வு, நாடு முழுவதும் நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்வு வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக பரவலாக புகார்கள் எழுந்துள்ளன. இந்தப் புகார்களை மாணவ, மாணவிகள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் கூறு
கின்றனர். பாடதிட்டத்துக்கு வெளியேயும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இது மத்திய பள்ளி கல்வி வாரியத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.இதையடுத்து, இந்தப் பிரச்சினையில் தீர்வு காண்பது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக சில பள்ளிக் கூட முதல்வர்களை சி.பி.எஸ்.சி. அழைத்திருக்கிறது.

கணித தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்குவது குறித்தும் சி.பி.எஸ்.சி. பரிசீலிக்கிறது.

இம்ப்ரூவ்மென்ட் தேர்வு நடத்தும் வாய்ப்பு பற்றியும் பரிசீலிக்கப்படுவதாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்