Skip to main content

ரூ.10 லட்சம் வரையிலான வீட்டுக்கடன்களுக்கு விதிமுறைகளை தளர்த்தியது ரிசர்வ் வங்கி


ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமான ரெபோ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது. இந்த வட்டி குறைப்பு காரணமாக வங்கிகளில் வாங்கப்படும் வீட்டுக்கடன், வாகன கடன்
களுக்கான வட்டி குறைய வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

இந்நிலையில், ரூ.10 லட்சம் வரையிலான வீட்டுக்கடன்களில் சில சலுகை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி. பொதுவாக வீடுகளை வாங்கும்போது அதில் பத்திர செலவு, பதிவுக்கட்டணம் என வீட்டின் விலையில் 15 சதவீதம் அளவுக்கு செலவு நீள்வது வழக்கம். இது வீடு 
வாங்குவோர்க்கு பெரும் சுமையாக இருந்து வருகிறது. இதை போக்கவும், நியாயமான விலையில் வீடுகள் கிடைக்கவும் ரிசர்வ் வங்கி விதிமுறைகளை தளர்த்தியுள்ளது. அதாவது, ரூ.10 லட்சத்திற்குட்ட வீடுகளை வாங்கும்போது அதற்காகும் பத்திர செலவு, பதிவுக்கட்டணம் மற்றும் மற்ற டாக்குமண்டேஷன் கட்டணத்தை வாங்கிய வீட்டுக்கடன் விகிதத்திலேயே (LTV (loan to value) ratio) செலுத்தினால் போதுமானது. தற்போது நடைமுறையில், வங்கிகள் இம்மூன்று கட்டணத்தையும் வீட்டின் மதிப்பில் சேர்ப்பதில்லை என்பது நினைவு கூரத்தக்கது. 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா