Skip to main content

1,000 அரசு தொடக்க பள்ளிகள் மூடும் அபாயம்


தொடக்கப் பள்ளிகளில், மாணவர் பற்றாக்குறையால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களை நீக்க, கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழகம் முழுவதும், 25,200 அரசு மற்றும் அரசு உ
தவிபெறும் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் தற்போது, 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அளவில், ஆசிரியர்கள் உள்ளனர். தலா 2 ஆசிரியர்கள்:இவற்றில், 10 ஆயிரம் பள்ளிகளில், தலா, இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இந்த இரண்டு ஆசிரியர்கள் தான், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 21 பாடங்களை நடத்த வேண்டும்.

மேலும், தேர்தல் பணிகள், சமூகநலத் துறைத் திட்டம், கல்வித் துறை திட்டப் பணிகளையும் மேற்கொள்கின்றனர். இதில் ஒரு ஆசிரியர் விடுமுறை எடுத்தால், ஒரு ஆசிரியர் மட்டுமே பள்ளியில் இருப்பார். அவரும் அரசுப் பணிக்கு சென்று விட்டால், பள்ளியில் ஆசிரியர் அல்லாத நிலை தான் ஏற்படுகிறது.தனியார் பள்ளிகளுக்கு, அதிக அளவில் அரசே அனுமதி அளிப்பதால், அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க, பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர். இதனால், அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது.ஆனால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, கல்வித் துறை முயற்சி மேற்கொள்ளவில்லை. மாறாக, மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளின், 1,000 ஆசிரியர் பணியிடங்களை, அரசிடமே திரும்ப ஒப்படைக்க, தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டு உள்ளது.

இதற்கு ஆசிரியர்களிடம் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆசிரியர் பணியிடங்களை குறைத்தால், தொடக்கப் பள்ளிகள் மூடும் அபாயம் ஏற்படும் என்று கவலை அடைந்து உள்ளனர்.
அதிகாரிகளிடம் முறையீடு:மாணவர் விகிதத்தை வைத்து, ஆசிரியர் பணியிடங்களை குறைப்பது, பள்ளிகளை கொஞ்சம் கொஞ்சமாக மூடுவதற்கு வழி ஏற்படும்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு