Skip to main content

உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்கள்: இந்த முறையும் இடம் பிடிக்காத இந்தியா




’தி டைம்ஸ் ஹையர் எஜூகேஷன்’ எனும் பத்திரிகை உலக அளவில் கல்வித்துறையில் சிறப்பான சேவை வழங்கும் மிகவும் மதிப்புமிக்க 100 பல்கலைக்கழகங்களைத் தேர்வு செய்து வருடந்தோறும் பட்டியல் வெளியிடும். அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள 2015
-ம் ஆண்டிற்கான பட்டியலில் இந்தியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் கூட இடம்பெறவில்லை.
சிறப்பு மிக்க இந்த பட்டியலில் உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகமாக அமெரிக்காவில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஹார்வேர்ட் பல்கலைக்கழகம் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலிடம் பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கேம்பிரிஜ்ட் பல்க‌லைக்கழகமும் இதைத் தொடர்ந்து ஆக்ஸ்போர்டு பல்‌க‌லைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்க‌லைக்கழகங்களும் இடம் பெற்றுள்ளன.

இதுகுறித்து தி டைம்ஸ் ஹையர் எஜூகேஷனின் ஆசிரியர் பில் பேட்டி கூறுகையில் “மிகப் பெருமையான அறிவார்ந்த வரலாறும், பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் மிகப்பெரிய நாடான இந்தியாவில், உலகின் மிகவும் மதிப்புமிக்க பல்கலைக்கழமாக தேர்ந்தெடுக்கப்படுமளவிற்கு ஒரு பல்கலைக்கழகம் கூட இல்லையென்பது கவலையளிக்கக் கூடிய ஒன்று“  என்றார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு