ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்பட்டமுதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடு
தமிழ்நாடு முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆயிரத்திற்கும் மேல் காலியாக உள்ளன.
அந்த இடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை முடிவு செய்து ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் முடிவை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைத்தது.
இதையொட்டி, ஆசிரியர் தேர்வு வாரியம் முறையாக விண்ணப்பங்களை பெற்று கடந்த ஜனவரி 10-ந் தேதி எழுத்து தேர்வை நடத்தியது. பின்னர், அதற்கான வினா விடைகளை வெளியிட்டு, தேர்வு முடிவை வெளியிட்டது.அதன் தொடர்ச்சியாக சான்றிதழ் சரிபார்ப்பு சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிலையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணையதளத்தில் நேற்று இரவு வெளியிட்டுள்ளது.