Skip to main content

பிளாஸ்டிக் கழிவில் செங்கல்: பேராசிரியர் - மாணவர் கண்டுபிடிப்பு


உள்ளாட்சி அமைப்புகளால் வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகளில் இருந்து செங்கல், டைல்ஸ் தயாரிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியின் தாவரவியல் துறை பே
ராசிரியர் ராஜேந்திரன், கலசலிங்கம் பல்கலை சிவில் துறை மாணவர் மனோஜ் பிரபாகர் இணைந்து இந்த புதிய தயாரிப்பை கண்டுபிடித்துள்ளனர். உள்ளாட்சி அமைப்புகள் திடக்கழிவு மேலாண்மை செய்வது சவால் நிறைந்த பணியாக இருக்கிறது. அதில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை மறு சுழற்சிக்கு பயன்படுத்தும் நடைமுறைகள் வெற்றிகரமாக இல்லை. குறிப்பாக 20 முதல் 100 மைக்ரான் கொண்ட பிளாஸ்டிக் கழிவுகள் எரியூட்டப்பட்டு அழிக்கப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து கட்டுமான பணிகளுக்கு உதவும் செங்கல், டைல்ஸ் போன்ற பொருட்களை தயார் செய்துள்ளனர்.


இது குறித்து அவர்கள் கூறியதாவது: பிளாஸ்டிக் கழிவுகளை சிறு துண்டுகளாக்கி, தண்ணீரில் சுத்தம் செய்து உலர்த்தப்பட்ட பின், குறிப்பிட்ட அளவு தாருடன் சேர்த்து உருக்க வேண்டும். இந்த கலவையுடன் உலர்ந்த விவசாயக் கழிவுகளை சேர்த்து கலவையாக்கி அச்சுகளில் விட்டு தேவையான வடிவங்களில் செங்கல், டைல்ஸ் தயாரிக்கலாம்.இந்த தயாரிப்பில் இவை தண்ணீரை உறிஞ்சுவதில்லை. வெப்பத்தாலும் இவை தன் நிலையை இழப்பதில்லை. எடை குறைவாகவும் இருக்கும். இவற்றை மாடியில் பதித்து மாடித்தோட்டங்களை வளர்க்கலாம். கான்கிரீட்டுகளில் நீர்புகாது. நகராட்சி, மாநராட்சிகளில் சேரும் பிளாஸ்டிக் குப்பைகளை இது போன்ற தயாரிப்புகளுக்கு பயன்படுத்தினால், குப்பைகளை அழிப்பதற்கும் ஒரு தீர்வாக அமையும் என்றனர். தொடர்புக்கு 94439 98480.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா