Skip to main content

நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மாற்றம்


தமிழகம் முழுவதும் பிளஸ்2 தேர்வுகள் மார்ச் 5ம் தேதி துவங்குகிறது. பிளஸ்2 தேர்வுகள் துவங்க ஒரு வாரமே  உள்ள நிலையில் நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் அறை எ
ண்.3ல் வைக்கப்பட்டிருந்த விடைத்தாள்களின் ‘டாப் சீட்கள்‘ கடந்த 21ம் தேதி  இரவு எரிந்து நாசமானது. இந்த ‘டாப் சீட்கள்’ மெயின் சீட்டுடன் இணைத்து தைத்து மாணவர்களுக்கு வழங்கப்படும். மாணவர்கள் தங்களது விடைத்தாள்களில்  பதிவு எண்ணை எழுத தேவையில்லை.

இந்த டாப் சீட்களில் தான் மாணவர்களின் பதிவு எண், போட்டோ 
ஆகியவை இடம்பெற்றிருக்கும் இந்த தீ விபத்தில் 1,200க்கும் அதிகமான டாப் 
சீட்கள் எரிந்து  நாசமானது. சீல் வைக்கப்பட்ட அந்த அறையில் ஒரு 
ஜன்னலும் இருந்துள்ளது. பொதுவாக தேர்வு தொடர்பான ஆவணங்கள் ஒரு 
அறையில் வைக்கும்போது,  அந்த அறையை மாவட்ட முதன்மைக் கல்வி 
அலுவலர்கள் ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்க வேண்டும். பாதுகாப்பு 
குறைவான அறைகளில் விடைத்தாள்களை  வைக்க அனுமதிக்கக் கூடாது. 

தேர்வுகள் தொடங்க ஒரு வாரமே உள்ள நிலையில், விடைத்தாள் எரிந்து 
நாசமான சம்பவம் தமிழக தேர்வுத்துறை வட்டாரத்தில் பெரும் 
அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. தேர்வு நடைமுறைகளில் கவனக்குறைவாக 
முதன்மைக் கல்வி அலுவலர் நடந்து கொண¢டதாக பள்ளிக்கல்வித் துறை 
கருதியது. இதையடுத்து  நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக 
இருந்த கஸ்தூரிபாய், நேற்று முன்தினம் இரவு அதிரடியாக பணியிட 
மாற்றம் செய்யப்பட்டார். 

விழுப்புரம் மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலராக 
பணியாற்றிய சுவாமிநாதன் நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக
 நேற்று  பொறுப்பேற்றார். கஸ்தூரிபாய் காத்திருப்போர் பட்டியலில்
 வைக்கப்பட்டுள்ளார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு