Skip to main content

கிராம உதவியாளர்களுக்கு விஏஓ பதவி உயர்வு




தமிழக வருவாய்த்துறை வரலாற்றில் முதல் முறையாக, கிராம உதவியாளர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பதவி
உயர்வு அளிப்பதற்காக தகுதியானவர்கள் பட்டியல் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் தயாரிக்கப்பட்டு வருகிறது.

கிராமங்களில் பகுதி நேர ஊழியர்களாகப் பணியாற்றிய கிராம உதவியாளர்கள் 1995- இல் முழுநேர அரசுப் பணியாளர்களாக்கப்பட்டனர். வருவாய்த் துறையில் கிராம உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணியில் சேருவோர் மட்டுமே எவ்வித பதவி உயர்வும் பெறாமல் இருந்தனர்.

2010-இல் கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களாகப் பதவி உயர்வு வழங்கும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 10 ஆண்டுகள் தொடர்ந்து பணி முடித்த கிராம உதவியாளர்களை தகுதியின் அடிப்படையில் அலுவலக உதவியாளர் பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்களில் 10 சதவீத இடங்களுக்கு பதவி உயர்வு அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அந்த பதவி உயர்வு பெரும்பாலானோருக்கு கிடைக்கவில்லை.

தற்போது, கிராம நிர்வாக அலுவலர்களாக பதவி உயர்வு வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டு அதைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்களில் 20 சதவீத பணியிடங்களை பணிமாற்றம் மூலம் கிராம உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கி பூர்த்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்களுக்குத் தகுதியான கிராம உதவியாளர்கள் இல்லாத நிலையில், அப்பணியிடங்களை நேரடி நியமனத்தில் பூர்த்தி செய்து கொள்ளலாம் என அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியது: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 10 ஆண்டுகள் பணி முடித்த, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கிராம உதவியாளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் காலிப்பணியிடங்களின் அடிப்படையில் 5-லிருந்து 10 கிராம உதவியாளர்களுக்கு பதவி உயர்வில் கிராம நிர்வாக அலுவலர்களாகப் பதவி உயர்வு பெற வாய்ப்பு உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் பதவி உயர்வு உத்தரவுகள் வழங்கப்பட உள்ளது என்றனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு