Skip to main content

கல்லூரி ஆசிரியர் போராட்டம் ஒத்திவைப்பு: பேச்சுவார்த்தையில் உடன்பாடு


கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தை, கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழுவினர் முற்றுகையிட முயன்று, 300 பேர் கைதாகினர்.

கோரிக்கைகளில் ஒன்று ஏற்றுக் கொள்ளப்பட்ட தால், தொட
ர் முற்றுகை போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. தர ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்கலை, கல்லூரி ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் நடத்தி வந்தன. உயர்கல்வித் துறை, இதை கண்டு கொள்ளவில்லை. எனவே, பல்கலை ஆசிரியர் சங்கம், அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட நான்கு
சங்கங்கள் இணைந்து, கல்லூரி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவை அமைத்து உள்ளன. இக்குழு சார்பில், ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், தமிழ்மணி உள்ளிட்டோர் தலைமையில், கல்லூரி கல்வி இயக்ககத்தை, நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, 300க்கும் மேற்பட்ட கல்லூரி ஆசிரியர்களை, போலீசார் கைது செய்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

போராட்டம் குறித்து, அரசு கல்லூரி ஆசிரியர் சங்க தலைவர் தமிழ்மணி கூறியதாவது: 

* கடந்த, 2001ல் வெளியான அரசாணை, 350ன் படி வழங்க வேண்டிய தர ஊதிய உயர்வும், பணி மேம்பாடும், 2006 முதல், 6,000 கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை. 

* 'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய திட்டம் அமல்படுத்தப்படும்' என, அ.தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டது. இதுவரை வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. 

* அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில், 5,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை துவக்கி உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

இந்நிலையில், நேற்று காலை, கூட்டு நடவடிக்கை குழு முக்கிய பிரதிநிதிகளை, உயர்கல்வி செயலர் அபூர்வா அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், 6,000 ஆசிரியர் களுக்கான தர ஊதிய கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டதாகவும், இதற்கான நிதித்துறை ஒப்புதல் பெறப்பட்டுள்ளதால் போராட்டத்தை கைவிடும்படியும், செயலர் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, தமிழ்மணி கூறும்போது, ''தர ஊதியம் தொடர்பான கோப்பு, துறைரீதியான ஒப்புதலுக்கு செல்வதால், ஏப்., மாதம் தரஊதிய உயர்வு வரும் என, உறுதி அளித்துள்ளனர். ''இதுகுறித்து, ஆலோசனை நடத்தினோம். தற்போதைக்கு, முற்றுகை போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம்,'' என்றார். 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு