Skip to main content

கப்பல் துறை கல்வி பயின்ற மாணவர்கள் பயிற்சிபெறுவதற்காக நிதியுதவி அளிக்க அரசு முடிவு

கப்பல் துறை தொடர்பான கல்வி பயின்ற மாணவர்களுக்கு, வேலையில் சேருவதற்கான பயிற்சி பெறுவதற்காக, நிதி உதவி அளிக்க, மத்திய நிதி அமைச்சகம் சம்மதித்துள்ளது.
மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சக வட்டாரங்கள் கூறி
யதாவது: சரக்கு கப்பலில் பணியாற்றுவதற்கு, பயிற்சி அளிக்கும் கல்வி நிறுவனங்கள், நாட்டின் பல இடங்களில் செயல்படுகின்றன. இங்கு பயிற்சி முடித்து தேர்வு பெறும் மாணவர்கள், பணியில் சேருவதற்கு முன், கப்பல்களில் களப் பணி குறித்த பயிற்சியை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இந்த பயிற்சியை அளிப்பதற்கு, சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனங்கள், அதிக கட்டணம் வசூலிக்கின்றன. மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க, அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளதால், கட்டணத்தை அதிகமாக வசூலிக்க வேண்டியுள்ளதாக, கப்பல் உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஷயத்தை, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம், நிதி அமைச்சகத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்றது. இதையடுத்து, இந்த பயிற்சியை பெறுவதற்கு, மாணவர்களுக்கு உதவும் வகையில், மூன்று லட்சம் ரூபாய் மானியம் அளிக்க, மத்திய நிதி அமைச்சகம் சம்மதம் தெரிவித்துள்ளது. பயிற்சிக்கு தேவையான மீதமுள்ள பணத்தை, வங்கிகளில் இருந்து, கல்விக் கடன் மூலம் பெறலாம். இந்த வங்கிக் கடனை, மாணவர்கள் எளிதாக பெறலாம்.
மத்திய அரசின் இந்த திட்டத்தால், 2010 - 12 காலத்தில், நாட்டின் பல்வேறு கல்வி நிறுவனங்களின் பயிற்சி முடித்த, 4,000 மாணவர்கள் பயன் பெறுவர். மத்திய அரசின் மானியம், சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும். முறையான கப்பல் போக்குவரத்து சங்கங்களில், பதிவு செய்யப்பட்ட கப்பல் நிறுவனங்களுக்கு மட்டுமே, மானியம் அளிக்கப்படும். இவ்வாறு, அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு