Skip to main content

மாணவர்கள் அச்சமடையும் வகையில் செயல்படக் கூடாது

பிளஸ் 2 தேர்வின்போது மாணவர்கள் அச்சமடையும் வகையில்செயல்படக் கூடாது எனபறக்கும்படையினருக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு 4 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட பறக்கும் படைகளும், பத்தாம் வகுப்புத் தே
ர்வுக்கு 5 ஆயிரத்துக்கும்அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வழங்கியுள்ள அறிவுரைகளின் விவரம்:தேர்வு எழுதும்போது மாணவர்கள் அச்சமடையும் வகையில் செயல்படக் கூடாது. தேர்வர்களின் மன நிலை, உடல் நிலை, தேர்வு எழுதும் நேரம் பாதிக்காத வகையில் செயல்படுதல் வேண்டும். தேர்வர்கள் கண்ணியமாக நடத்தப்படுதல் வேண்டும். சந்தேகத்துக்குரிய தேர்வர்களிடம் மட்டும் சோதனை நடத்தினால் போதுமானது. அனைவரையும் கட்டாயமாகச் சோதிக்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்வு மையங்களில்ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் தேர்வர்கள் கண்டறியப்பட்டால், அவர்களது வினாத்தாள், விடைத்தாள், கைப்பற்றப்பட்ட இதர ஆவணங்களை முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்ட தேர்வர்கள் அன்றைய தேர்வைத் தொடர்ந்து எழுத முடியாது.

தொடர்ந்து வரும் இதர தேர்வுகளை எழுத அனுமதிக்கலாம். தவறு செய்தவர், தவறு செய்த மாணவரைப் பிடித்தவர் ஆகிய இரண்டு பேரின் வாக்குமூலமும் வழங்கப்பட வேண்டும். ஆள்மாறாட்டம் செய்திருந்தால் உடனடியாகக் காவல் துறையினரிடம் புகார் தெரிவிக்க வேண்டும்.அனைத்துத் தேர்வு மையங்களுக்கும் 10 அறைகளுக்கு ஒருவர் என்ற விகிதத்தில்தேர்வு மையத்திலேயே நிலையான கண்காணிப்புப் படையும் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா