Skip to main content

‘கல்வி வியாபாரமயமாக மாறிக்கொண்டு இருக்கிறது’ ஐகோர்ட்டு நீதிபதி பேச்சு



‘கல்வி வியாபாரமயமாக மாறிக்கொண்டு இருக்கிறது. என்று ஐகோர்ட்டு நீதிபதி ராம சுப்பிரமணியன் கூறினார்.

கருத்தரங்கம்

கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில், ‘கம்பன் கவி அமுதம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பல்கலைக்க
ழக துணைவேந்தர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார்.சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வெ.ராம சுப்பிரமணியன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-


வியாபாரமயம்

இப்போது கல்வி வியாபாரமயமாக மாறிக்கொண்டு இருக்கிறது. அறம்சார்ந்த கல்வியை கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

அறம்சார்ந்த கல்வியை இந்த பல்கலைக்கழகம் வழங்கி வருவதுடன், ஒழுக்கமும், கட்டுப்பாடும் உள்ள மாணவிகளை இங்குதான் காண முடிகிறது. அவினாசிலிங்கம் தனக்கென்று வாழாதவர்.

3,500 ஏக்கர் நிலத்தை ராமகிருஷ்ணா மடத்திடம் வழங்கி துறவியாக வாழ்ந்தவர். அவரது வாழ்க்கை போற்றுதலுக்குரியது.9-வது நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த கம்பர், ஒட்டகூத்தர், புகழேந்தி ஆகியோர் தமிழுக்காக அரும்பணியாற்றினார்கள். வால்மிகி எழுதிய ராமாயணம் 7 காண்டங்களை கொண்டது. கம்பரின் கம்பராமாயணம் 6 காண்டங்களுடன் சிறப்பான வரலாற்று காப்பியமாக அமைந்துள்ளது.

கம்பனின் கவி அமுதம்

ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள கல்வெட்டில், கம்பரை போற்றும் வகையில், ‘சொற்சிங்கத்தை கற்சிங்கம்(நரசிம்மர்) கைதூக்கி ஆசிர்வதித்தது’ என்ற வரி செதுக்கப்பட்டுள்ளதை பலரும் இன்றும் காணலாம். எனவே கம்பனின் கவி அமுதம்போன்றது.

இவ்வாறு நீதிபதி ராமசுப்பிரமணியன் கூறினார்.

கருத்தரங்கில் துணைவேந்தர் ஷீலா ராமச்சந்திரன், பா.நீலாவதி, தமிழ்த்துறை பேராசிரியை சி.சுந்தரம்மாள், அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் மற்றும் பள்ளி மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு