Skip to main content

நாளை இரண்டாம் கட்ட போலியோ தடுப்பு முகாம்


               
தமிழகம் முழுவதும், 65 லட்சம் குழந்தைகளுக்கு, இரண்டாம் கட்ட போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம், 22ம் தேதி நடக்கிறது. முதற்கட்ட முகாமில், சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், மீண்டும் கொடுக்க வேண்டும்.

இளம்பிள்ளைவாத நோய் பாதிப்பில்லாத சமுதாயத்தை ப
டைக்கும் வகையில், நாடு முழுவதும், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, ஆண்டுக்கு இருமுறை, போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான முதற்கட்ட முகாம், ஜன., 18ம் தேதி நடந்தது. இரண்டாம் கட்ட முகாம், 22ம் தேதி நடக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், பஸ், ரயில் நிலையங்கள் என,
மாநிலம் முழுவதும், 43,051 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. காலை 7:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை, மையங்கள் செயல்படும். இதில், சுகாதார பணியாளர், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் என, இரண்டு லட்சம் பேர் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மொத்தம், 65 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து தர திட்டமிடப்பட்டு உள்ளது. விடுபட்ட குழந்தைகளை கண்டறிய வசதியாக, சொட்டு மருந்து போட்டதும், குழந்தைகள் விரலில், 'மை' வைக்கப்பட உள்ளது. முதற்கட்ட முகாமில், சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், இந்த முகாமிலும் கட்டாயம் கொடுக்க வேண்டும். புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும், சொட்டு மருந்து கொடுக்க மறக்க வேண்டாம் என, பொது சுகாதாரத் துறை வலியுறுத்தி உள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு