கலை மற்றும் கைவினைக்கு புதிய பல்கலைக்கழகம் துவங்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அ
மைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.
பல்கலை குறித்து விரிவான ஆராய்ச்சியை தொடங்க மத்திய மனிதவள அமைச்சகம் குழு ஒன்றை நியமித்து, மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கும், திறன்களை வெளியே கொண்டு வரவும் கலை மற்றும் கைவினைக்கு பல்கலைக்கழகம் அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்