Skip to main content

மே துவக்கத்தில் விண்ணப்பம்; ஜூன் இறுதியில் இன்ஜி., கவுன்சிலிங்

பொறியியல் படிப்பு விண்ணப்பங்களை, மே முதல் வாரத்தில்வினியோகிக்கவும், ஜூன் இறுதி வாரத்தில் இருந்து கவுன்சிலிங் நடத்தவும், அண்ணா பல்கலை முடிவெடுத்து உள்ளது.தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வுகள், மார்ச், 5ல் துவங்கி, 31ம் தேதி முடிவடைகிறது. தேர்வு முடி
வுகள் வெளியானதும் வழக்கம் போல், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

முதல் ஆய்வு கூட்டம்:

இந்த ஆண்டுக்கான, பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பம் வழங்குதல், கவுன்சிலிங் நடத்துதல் தொடர்பான, முதல் ஆய்வு கூட்டம், அண்ணா பல்கலை துணைவேந்தர் ராஜாராமன் தலைமையில், நேற்று நடந்தது.

மாற்றம் இல்லை:

இந்த ஆண்டு பொறியியல் கவுன்சிலிங்கில் மாற்றம் இல்லை. வழக்கம் போல், சென்னையில் மட்டுமே, கவுன்சிலிங் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு, பொறியியல் படிப்புகளுக்கு, 2.40 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு, 2.13 லட்சம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. அதே போல், இந்த ஆண்டும், 2.40 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்படுகின்றன. இவை, மே முதல் வாரத்தில் இருந்து, 60 மையங்களில் வழங்கப்படும். விண்ணப்ப கட்டணத்தில் மாற்றம் ஏதும் இல்லை. ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு, 250 ரூபாய்; பொதுப்பிரிவினருக்கு, 500 ரூபாய். கவுன்சிலிங், கடந்த ஆண்டை போல், இந்த ஆண்டும், ஜூன் இறுதி வாரத்தில் துவங்கும் என, பல்கலை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

'சீட்' உயர்கிறது!

கடந்த ஆண்டு, பொறியியல் கவுன்சிலிங்கில், 517 அரசு, தனியார் கல்லூரிகளில், 2.05 லட்சம் இடங்கள் இருந்தன. கவுன்சிலிங் முடிவில், 60 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன. இந்த ஆண்டு, 22 புதிய கல்லூரிகள் சேர்த்து, 539 பொறியியல் மற்றும் 44 பி.ஆர்க்., கல்லூரிகள் பங்கேற்கின்றன. இதனால், பொறியியல் இடங்களின் எண்ணிக்கை, 2.10 லட்சமாக உயர வாய்ப்பு உள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு