Skip to main content

‘இந்திய கல்வி முறையே சிறந்தது’


நமது இந்திய கல்வி முறையைப் பற்றி நாமே குறைத்து மதிப்பிடுகிறோம். ஆனால், உலகளவில் சிறந்த கல்வி முறையை நாம் பின்பற்றுகிறோம். அமெரிக்க பொருளாதாரத்தை வளர்ப்பதே இந்திய கல்விமுறையை பின்பற்றி படித்த நம் இந்திய விஞ்ஞானிகள், தகவல் தொழில்நுட்ப வ
ல்லுனர்கள் போன்றவர்கள் தான்.
இந்தியர்கள் உழைப்பாளிகள்
மேலை நாடுகள், இந்தியா கல்வி நிறுவனங்களில் படித்த திறன் மிக்க மாணவர்களை அதிகளவில் பணியில் அமர்த்திக்கொள்ள முன்வருகின்றன. இந்திய மாணவர்களும் சிறந்த வாய்ப்புகளுக்காக அங்கே செல்கின்றனர்.
இந்தியர்களை அதிகளவில் பணிக்கு அமர்த்திக்கொள்ள அவர்கள் விரும்புவதற்கு, நம் மக்கள் சிறந்த உழைப்பாளிகள் என்பதும் ஒரு காரணம். சம்பாதிக்க வேண்டும் என்ற உணர்வில் விடுமுறை நாட்கள் பாராது நமது மக்கள் அதிகளவில் உழைக்கின்றனர். மேலை நாட்டு மக்களோ ஓய்விலும், பொழுதுபோக்கிலும் அதிக நேரம் செலவிடக்கூடியவர்கள்.
அமெரிக்காவை விட இந்தியாவில் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. ஆனால், அவை நமது மக்கள் தொகைக்கு போதுமானதாக இல்லை. போட்டிகள் அதிகம் என்பதால் அனைவருக்கும் சிறந்த வேலைவாய்ப்புகள் வழங்குவது கடினம்.  இந்திய பட்டதாரிகள் வேலைவாய்ப்பை மட்டுமே எதிர்நோக்காமல், சுயதொழில் செய்ய அதிகமானோர் முன்வர வேண்டும்.
சிறந்த கலாச்சாரம்
இந்தியர்கள் வேலைக்காக அயல்நாடுகளுக்கு சென்றாலும், அவர்கள் தங்களது குழந்தைகளை இந்தியாவிலேயே படிக்க வைக்க விரும்புகின்றனர். மாணவர்களிடையே அங்கு உள்ள துப்பாக்கி கலாச்சாரம் இங்கு இல்லை. இந்திய கலாச்சாராத்தையும், கல்வி சூழலையும் அதிகம் நேசிக்கின்றனர். இந்தியாவில் அதிகளவிலான சர்வதேச பள்ளிகள் உருவாவதற்கு முக்கிய காரணமும் இது தான். பள்ளி மற்றும் உயர்கல்வியில் இந்தியா சிறப்பாகவே உள்ளது. ஆராய்ச்சி படிப்புகளில் வேண்டுமானால் மேலை நாடுகள் நம்மைவிட சிறந்து விளங்கலாம்.
நன்கொடை இல்லை
சமச்சீர் கல்வி முறையைப் பொருத்தவரை, மெதுவாக படிக்கும் திறன் கொண்டவர்களுக்கே அதிக பயன்தரும். பலதரப்பட்ட மக்கள் உள்ள நம் நாட்டில் அனைவருக்கும் சிறந்த கல்வி வழங்கப்பட வேண்டும். அதன் ஒரு முயற்சியாக பிரின்ஸ் கல்விக் குழுமத்தில் உள்ள பள்ளிகள், பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள் நிறுவப்பட்டு, அவற்றின் எதிலும் நன்கொடை பெறுவது இல்லை. சிறந்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு