Skip to main content

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கை


மதுரையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதல் வகுப்புக்கான சேர்க்கைக்கு முதல் நாளிலேயே 1366 விண்ணப்பங்களை பெற்றோர்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச்சென்றனர்.
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மதுரை நரிமேடு மற்
றும் திருப்பரங்குன்றம் ஆகிய இரு இடங்களில் உள்ளது. இந்தப் பள்ளிகளில் 2015 ஆம் ஆண்டுக்காண முதல் வகுப்பு சேர்க்கைக்கு திங்கள்கிழமை முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.
மதுரை நரிமேடு பள்ளியில் முதல்வகுப்பில் 160 இடங்களுக்கும், திருப்பரங்குன்றத்தில் 120 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இதற்காக பள்ளிகளில் பெற்றோர்கள் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்களை பெற்றுச்சென்றனர். முதல் நாளிலேயே நரிமேடு பள்ளியில் 1008, திருப்பரங்குன்றம் பள்ளியில் 358 விண்ணப்பங்களும் விநியோகிக்கப்பட்டன. விண்ணப்பங்கள் பிப்.10 இல் தொடங்கி மார்ச் 10ஆம் தேதி வரை காலை 9 மணியிலிருந்து மதியம் 1 மணிவரை விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மார்ச் 10 மாலை 5 மணிக்குள் அந்தந்த பள்ளிகளில் தரவேண்டும்.
இதில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 25 சதவிகிதம் ஒதுக்கீடு உள்ளது. அவை மார்ச் 14 ஆம் தேதி ஆட்சியர் முன்னிலையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். மற்ற இடங்களுக்கு தேர்வாகும் மாணவர்கள் விபரம் மார்ச் 18 ஆம் தேதி அறிவிப்பு செய்யப்படும். ஏப்.1 ஆம் தேதி முதல் அவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு