Skip to main content

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கை


மதுரையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதல் வகுப்புக்கான சேர்க்கைக்கு முதல் நாளிலேயே 1366 விண்ணப்பங்களை பெற்றோர்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச்சென்றனர்.
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மதுரை நரிமேடு மற்
றும் திருப்பரங்குன்றம் ஆகிய இரு இடங்களில் உள்ளது. இந்தப் பள்ளிகளில் 2015 ஆம் ஆண்டுக்காண முதல் வகுப்பு சேர்க்கைக்கு திங்கள்கிழமை முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.
மதுரை நரிமேடு பள்ளியில் முதல்வகுப்பில் 160 இடங்களுக்கும், திருப்பரங்குன்றத்தில் 120 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இதற்காக பள்ளிகளில் பெற்றோர்கள் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்களை பெற்றுச்சென்றனர். முதல் நாளிலேயே நரிமேடு பள்ளியில் 1008, திருப்பரங்குன்றம் பள்ளியில் 358 விண்ணப்பங்களும் விநியோகிக்கப்பட்டன. விண்ணப்பங்கள் பிப்.10 இல் தொடங்கி மார்ச் 10ஆம் தேதி வரை காலை 9 மணியிலிருந்து மதியம் 1 மணிவரை விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மார்ச் 10 மாலை 5 மணிக்குள் அந்தந்த பள்ளிகளில் தரவேண்டும்.
இதில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 25 சதவிகிதம் ஒதுக்கீடு உள்ளது. அவை மார்ச் 14 ஆம் தேதி ஆட்சியர் முன்னிலையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். மற்ற இடங்களுக்கு தேர்வாகும் மாணவர்கள் விபரம் மார்ச் 18 ஆம் தேதி அறிவிப்பு செய்யப்படும். ஏப்.1 ஆம் தேதி முதல் அவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா