Skip to main content

பணியாளர்கள் இல்லாததால் பள்ளிகளில் வீணாகும் கணினிகள்


அரசு உயர்நிலைப் பள்ளிகளில் கணினிகள் இருந்தும், அதற்கான பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் பணிகள் பாதிக்கப்படுவதோடு, கணினிகளும் வீணடிக்கப்படுவதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட
அரசு உயர்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 147 பள்ளிகளில் மட்டுமே தகவல் தொடர்பு வசதிக்காக கணினிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் பள்ளியின் வளர்ச்சிப் பணி, திட்டப் பணி, புகார்கள் குறித்து கல்வித் துறையின் உயர் அலுவலர்கள் உடனுக்குடன் அறியவும், உத்தரவுகளைத் தெரிவிக்கவும் முடிகிறது.
தவிர, வருவாய்த் துறையுடன் பள்ளிக் கல்வித் துறை இணைந்து மாணவர்களுக்கான ஜாதி, வருவாய்ச் சான்றிதழ்களையும் வழங்க முடியும். அரசு பொதுத் தேர்வுக்கான அறிவிப்பு, அதற்குரிய மாணவ, மாணவிகளின் வரிசை எண் பட்டியல் ஆகியவையும் உடனடியாகத் தெரிவிக்க முடியும்.
ஆனால், திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் கணினி வசதி செயல்படவில்லை. அந்த வசதி உள்ள பள்ளிகளில் கணினிப் பயிற்சி பெற்ற பணியாளர்கள் தற்போது பணியில் இல்லை.
காலை 10 மணி அளவில் குறிப்பிட்ட ஒரு பள்ளியின் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை வகுப்பறை, கழிவறைகள் எத்தனை என கல்வித் துறை அலுவலகத்தின் மூலம் விவரம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பப்பட்டால், குறித்த நேரத்தில் பள்ளித் தலைமையாசிரியருக்கு அது தொடர்பாக தகவல் தெரிவிக்க உரிய பணியாளர்கள் இல்லை.
மற்ற பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர், கல்வித் துறை அலுவலகத்தினர் யாராவது தொலைபேசி, செல்லிடப்பேசி மூலம் சம்பந்தப்பட்ட பள்ளிக்குத் தகவல் தெரிவித்த பின்னரே கணினியை இயக்க தாற்காலிகப் பணியாளர்கள் தேடப்படும் நிலை உள்ளது.
அதே போன்று கல்வித் துறை அலுவலகத்துக்கு உடனடியாக பதில் தெரிவித்து, மின்னஞ்சல் அனுப்பவும் முடிவதில்லை.
இதற்குக் காரணம் அந்தக் கணினி தொடர்ந்து செயல்பாடின்றி முடங்கிக் கிடப்பதுதான்.
இதனால் பதில் கடிதம் தயாரித்து இணையதள மையங்களுக்குச் சென்று மின்னஞ்சல் அனுப்புகின்றனர்.
கிராமப்புறப் பள்ளிகளில் நிலைமை இன்னும் படுமோசம். அவர்கள் இணையதள மையங்களுக்காக, பல கி.மீ. தூரம் பயணித்து நகர்ப்புறங்களுக்குச் சென்று வர வேண்டும்.
எனவே கணினிகளை இயக்குவதற்கான பணியாளர்களையும், ஆசிரியர்களையும் கல்வித் துறை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:
இன்றைய உலகில் தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், அரசுப் பள்ளிகளில் அதற்கான அடிப்படைப் பயிற்சி பெற்ற பணியாளர்கள் இல்லை.
பெரும்பாலான பள்ளிகளில், ஆசிரியர்களே பற்றாக்குறையாக உள்ளனர். அதனால், மாணவர்களை கட்டுப்படுத்தவும் முடியவில்லை. அவர்களைத் தேர்ச்சி அடையச் செய்யவும் முடிவதில்லை என்றார்

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு