Skip to main content

மாணவர்களை சுற்றுலாவுக்கு பாதுகாப்பாக அழைத்துச்செல்ல வேண்டும்


மாணவர்களை சுற்றுலாவுக்கு பாதுகாப்பாக அழைத்துச்செல்ல வேண்டும் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை
மாணவர்களை சுற்றுலாவுக்கு பாதுகாப்பாக அழைத்துச்செல்ல
வேண்டும் என்று பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

மாணவர் சாவு

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சுற்றுலா அழைத்துச்செல்லப்பட்டபோது இறந்தார். இந்த சம்பவம் எதிரொலியாக பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கும் முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது:-
* பள்ளிக்கூட மாணவர்-மாணவிகளை சுற்றுலா அழைத்துச்செல்லும்போது எந்த மாவட்டத்திற்கு சுற்றுலா செல்கிறார்களோ அந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அல்லது மாவட்ட கல்வி அதிகாரியின் அனுமதி பெறவேண்டும்.
* மழை அல்லது கடும் வெயில் காலங்களில் மாணவர்களை சுற்றுலா அழைத்துச்செல்லக்கூடாது.பாதுகாப்பாக அழைத்துச்செல்ல வேண்டும்.
* மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச்செல்ல வேண்டும்.
* மாணவர்களை அழைத்துச்செல்லும் வாகனம் சரியாக இருக்க வேண்டும். ஓட்டுனர் மது அருந்துபவராக இருக்கக்கூடாது.
* சுற்றுலா அழைத்துச்செல்லும்போது எந்த இடத்திற்கு அழைத்துச்செல்லப்போகிறோம் என்பதை முன்கூட்டியே பெற்றோரிடம் கூறி அவர்களின் முழு சம்மதத்துடன் அனுமதி கடிதம் பெறுவது அவசியம்.
* 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் சுற்றுலா செல்ல வேண்டும்.

நீர்நிலைக்கு ...

* நீர் நிலைகளுக்கு மாணவர்களை சுற்றுலா அழைத்துச்செல்லக்கூடாது.
* கூடிய மட்டும் மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச்செல்ல அனைத்து முன்ஏற்பாடுகளையும் தலைமை ஆசிரியர் கவனிக்க வேண்டும்.
* இந்த சுற்றறிக்கையை தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளும் தவறாமல் பின்பற்றவேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் ச.கண்ணப்பன் தெரிவித்துள்ளார். 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு