Skip to main content

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இணைய வணிக பயிற்சி

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இணைய வணிக பயிற்சி எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இணைய வணிக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு எஸ்.எஸ்.
எல்.சி., பிளஸ்-2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இணைய வணிக பயிற்சி

இது தொடர்பாக கோவை அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனர் எஸ்.அழகிரிசாமி வெளியிட்டு உள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-


புதுடெல்லியில் உள்ள மத்திய அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்துடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு இணைய வணிக பயிற்சி (இ-காமர்ஸ் இன்டக்ஷன் டிரெயினிங்) அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்படி கோவை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 30 வயதுக்கு உட்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. அல்லது பிளஸ்-2 படித்தவர்கள் இந்த பயிற்சியில் சேர விண் ணப்பிக்கலாம். பயிற்சி காலம் 4 வாரங்கள். முதல் வாரம் கோவை வகுப்பறையில் பயிற்சி அளித்து, கடைசி 3 வாரங்கள் தனியார் நிறுவனத்தில் பணி தொடர்பான பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் முடிவில் அனைவருக்கும் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

ஊதியம் வழங்கப்படும்

பணியில் சேருபவர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 500 முதல் ரூ.8 ஆயிரம் வரை ஊதியமாக வழங்கப்படும். பயிற்சியில் சேர விண்ணப்பிப்பவர்கள் இரு சக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். பெட்ரோல் செலவினம் வழங்கப்படும். பயிற்சிக்கான விண்ணப்பங்கள் தற்போது அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வருகிற 20-ந் தேதி கடைசி நாள். பயிற்சி குறித்த விவரங்கள் தேவைப்படுவோர் துணை இயக்குனரை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு