Skip to main content

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இணைய வணிக பயிற்சி

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இணைய வணிக பயிற்சி எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இணைய வணிக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு எஸ்.எஸ்.
எல்.சி., பிளஸ்-2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இணைய வணிக பயிற்சி

இது தொடர்பாக கோவை அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனர் எஸ்.அழகிரிசாமி வெளியிட்டு உள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-


புதுடெல்லியில் உள்ள மத்திய அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்துடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு இணைய வணிக பயிற்சி (இ-காமர்ஸ் இன்டக்ஷன் டிரெயினிங்) அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்படி கோவை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 30 வயதுக்கு உட்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. அல்லது பிளஸ்-2 படித்தவர்கள் இந்த பயிற்சியில் சேர விண் ணப்பிக்கலாம். பயிற்சி காலம் 4 வாரங்கள். முதல் வாரம் கோவை வகுப்பறையில் பயிற்சி அளித்து, கடைசி 3 வாரங்கள் தனியார் நிறுவனத்தில் பணி தொடர்பான பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் முடிவில் அனைவருக்கும் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

ஊதியம் வழங்கப்படும்

பணியில் சேருபவர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 500 முதல் ரூ.8 ஆயிரம் வரை ஊதியமாக வழங்கப்படும். பயிற்சியில் சேர விண்ணப்பிப்பவர்கள் இரு சக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். பெட்ரோல் செலவினம் வழங்கப்படும். பயிற்சிக்கான விண்ணப்பங்கள் தற்போது அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வருகிற 20-ந் தேதி கடைசி நாள். பயிற்சி குறித்த விவரங்கள் தேவைப்படுவோர் துணை இயக்குனரை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா