Skip to main content

பிரச்னைகள் ஏற்பட்டால் தனியார் கல்லூரிகள் அரசுடமை : அமைச்சர் பழனியப்பன் எச்சரிக்கை


பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது காட்டுமன்னார்கோவில் முருகுமாறன் (அதிமுக) கேட்ட கேள்விகளுக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில் வருமாறு:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு ஏற்
று நடத்த வேண்டும் என்று அங்கு படிக்கும் மாணவர்களும், பல்கலைக்கழக ஆசிரியர்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர். அதற்காக பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர். அதனால்தான் மாணவர்களின் நலன்கருதி அந்த பல்கலைக்கழகம் அரசுடமையாக்கப்பட்டது.

இதேபோல், கோவையில் அறக்கட்டளை மூலம் இயங்கும் ஒரு தனியார் அரசு உதவிபெறும் கல்லூரியையும் அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதே நிலைதான் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் கல்லூரியிலும் உள்ளது. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு கல்வியில் பிரச்னை வந்தால் அந்த கல்லூரிகளை அரசு ஏற்று நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு