Skip to main content

போட்டி தேர்வு: சிறப்பு ஆசிரியர்கள் அதிர்ச்சி


அரசு பள்ளிகளில் இசை, ஓவியம், விளையாட்டு, தையல், உடற்கல்வி ஆகிய பாடப் பிரிவுகளுக்கு, ஆசிரியர் பற்றாக்குறை நிலவியதால், 2011ல், 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். மாதம், 5,000 ரூபாய் மதிப்பூதி
யத்தில், வாரத்தில் மூன்று அரை நாட்கள் வீதம் மாதத்தில், 12 அரை நாட்கள் பணிநாட்களாக வரையறுக்கப்பட்டன.


எதிர்காலத்தில் முழுநேர பணி வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பணியாற்றி வருகின்றனர். அந்த பணியிடங்களில், போட்டித்தேர்வு மூலம் நியமனம் நடக்கும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால், மதிப்பூதியத்தில் பணி செய்யும் பகுதி நேர ஆசிரியர்கள் அதிர்ச்சி
அடைந்துள்ளனர். உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள், 530, ஓவிய ஆசிரியர், 250, தையல் ஆசிரியர், 160, இசை ஆசிரியர், 55 என, 995 சிறப்பாசிரியர் பணியிடங்கள் உள்ளன. போட்டித்தேர்வு மூலம் பணியிடத்தை நிரப்பினால், தங்கள் வாய்ப்பு பறிபோகும் என, பகுதிநேர ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.


 ''அரசு கவின் கல்லூரியில், ஐந்தாண்டு பட்டம் பெற்ற பட்டதாரிகள் மட்டுமே, போட்டி தேர்வில் வெற்றி பெற முடியும் என்பதால், சிறப்பாசிரியர் பணியிடம் பறிபோகும் நிலை, பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ,'' 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா