Skip to main content

ஐஐடி வழங்கும் இணையதள குறுகிய கால சான்றிதழ் படிப்புகள்


பல்வேறு தலைப்புகளில் இணையதள குறுகிய கால சான்றிதழ் படிப்புகளை சென்னை ஐஐடி நடத்தி வருகிறது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக நிதி உதவியுடன் நாடு முழுவதும் உள்ள 7 ஐஐடி-களும், பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனமும்
இணைந்து இந்த சான்றிதழ் படிப்பை "தேசிய தொழில்நுட்ப மேம்பாட்டு கற்றல் திட்டம்' (என்.பி.டி.இ.எல்.) என்ற பெயரில் செயல்படுத்தி வருகின்றன.
இதுகுறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்தத் திட்டத்தின் கீழ் கிளாசிகல் இயற்பியல், பொருளியல் தத்துவ வரலாறு, கணினி தொழில்நுட்பம் ஆகிய மூன்று தலைப்புகளில் இணையதள சான்றிதழ் படிப்புகள் இதுவரை வழங்கப்பட்டு வருகின்றன. இதில் 2,800 மாணவர்கள் பங்கேற்று சான்றிதழ் பெற்றுள்ளனர்.
டேட்டாபேஸ் டிஸைன், எண் கணித நடைமுறைகள், எனர்ஜி சிஸ்டம்ஸ், குவான்ட்டம் இயற்பியல், அணு இயற்பியல், கணித இயற்பியல் என்பன உள்ளிட்ட மேலும் 14 தலைப்புகளின் கீழ் சான்றிதழ் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
இந்தப் படிப்புகள் அனைத்தையும் இலவசமாகப் படிக்க முடியும். தேர்வுக்கு மட்டும் சிறிதளவு கட்டணம் செலுத்த வேண்டும்.
இதுகுறித்த மேலும் விவரங்களை onlinecourses.nptel.ac.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு