Skip to main content

ஏ.இ.ஓ., அலுவலக பணிகளில் ஆசிரியர்கள்


மதுரை உதவி தொடக்க கல்வி (ஏ.இ.ஓ.,) அலுவலகங்களில் ஊழியர்கள் பற்றாக் குறையை சமாளிக்க ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால் கல்விப்பணி பாதிப்பதாக புகார் எழுந்துள்ளது.

மாவட்டத்தில் 15 உதவி தொடக்க கல்வி அலுவலகங்கள் உள்ளன. இங்கு ஆசிரியர்கள் சம்பள 'பில்' தயாரிப்பு, ஆசிரியர்களின் மாதாந்திர அறி
க்கையை ஆய்வு செய்து 'ரிப்போர்ட்' அளிப்பது, மாணவர்களுக்கு 14 வகை இலவச பொருட்கள் வழங்குவது தொடர்பாக முழு விவரங்கள் தயாரிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.பல ஆண்டுகளாக அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. மேலும் இளநிலை உதவியாளர், உதவியாளர், டைப்பிஸ்ட் பணியிடங்களும் காலியாக உள்ளன. இதனால் ஆசிரியர்களின் ஓய்வூதியப் பலன்கள் தயாரிப்பு மற்றும் அலுவலகப் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க ஆசிரியர் சிலரை அலுவலக பணிகளுக்கு ஈடுபடுத்துகின்றனர். இதனால் மாணவர் கல்வி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் முருகன் கூறியதாவது: காலிப் பணியிடங்களில் புதிய ஊழியர்களை நியமிக்க பல ஆண்டுகளாக வலியுறுத்துகிறோம். குறிப்பாக அலுவலக உதவியாளர் பணியிடம் தற்போது இல்லை. ஊழியர் பற்றாக்குறையால் உசிலம்பட்டி அலுவலகத்தில் ஜனவரிக்குரிய சம்பளம் பிப்.5ல் தான் வழங்கப்பட்டது. பொங்கல் போனசும் பண்டிகைக்கு பின்னர் தான் கிடைத்தது. ஓய்வூதிய பணிகளும் கிடப்பில் உள்ளன. ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். அரசு இப்பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு