Skip to main content

பாலிடெக்னிக் மாணவர்களுக்கு கல்வி கட்டணம்: நீதிபதி குழு முடிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு

பாலிடெக்னிக் மாணவர்களுக்கான கட்டண நிர்ணயம் குறித்து, நீதிபதிகுழுவை அணுகும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு சுயநிதி பாலிடெக்னிக் நிர்வாக சங்கத்தின் தலைவர் செல்வமணி, தாக்கல் செய்த மனு: சுயநிதி பாலிடெக்னிக் வகுப்புகளுக்கான கல்வி
கட்டணத்தை,தமிழக அரசு, 2002ல் நிர்ணயித்தது. அதன்படி, அரசு ஒதுக்கீட்டுக்கு, 6,500 ரூபாய், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 21,700 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டது. கட்டணத்தை உயர்த்தும்படி, கோரிக்கை விடுக்கப்பட்டது; 2003ல், புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, ஆண்டுக்கு, 30 ஆயிரம் ரூபாய், கட்டணம் நிர்ணயிக்க பரிசீலிக்கும்படி, கல்லூரிகளின் நிர்வாகத்துக்கு, அரசு அறிவுறுத்தியது. ஒற்றைச்சாளர முறையில் வரும் மாணவர்களுக்கு, கட்டணத்தில், 5,000 ரூபாய் சலுகை வழங்கவும், அறிவுறுத்தப்பட்டது. புதிய கட்டண விகிதத்தின்படி, நாங்கள் வசூலித்து வருகிறோம். கடந்த, 2012ல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், 'ஆதிதிராவிட மாணவர்களிடம் இருந்து,கட்டணம் வசூலிக்க கூடாது. அந்த கட்டணத்தை, அரசே தரும்' என, கூறியது. புதிய உத்தரவின்படி, கட்டணத்தை தராமல், பழைய கட்டணத்தை அரசு தந்தது. ஒவ்வொரு மாணவனுக்கும், 30 ஆயிரம் ரூபாய், கட்டணமாக தர, அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.அரசு தரப்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி, ''பாலிடெக்னிக் வகுப்புகளுக்கு, கட்டணம் நிர்ணயிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி என்.வி.பாலசுப்ரமணியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை, அரசு வழங்கும்,'' என்றார். மனுவை விசாரித்த, நீதிபதி சிவஞானம் பிறப்பித்த உத்தரவு: அரசு நியமித்துள்ள குழுவை, மனுதாரர் சங்கம் அணுக வேண்டும். நீதிமன்ற உத்தரவின் நகலை இணைத்து, நீதிபதி குழுவிடம், மனு அளிக்க வேண்டும். மனு, அளிக்கும்பட்சத்தில், அதை, கட்டண நிர்ணய குழு பரிசீலிக்கும். மனுதாரர் சங்கத்தையும், ஆதிதிராவிடர் நலத் துறைதரப்பையும் கேட்ட பின், தகுதி அடிப்படையில், உத்தரவு பிறப்பிக்கும். இவ்வாறு, நீதிபதி சிவஞானம் உத்தரவிட்டுள்ளார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு