Skip to main content

அரசு நியமித்த கமிட்டியை தனியார் பாலிடெக்னிக் அணுக வேண்டும்

கல்வி கட்டணம் விவகாரம்: அரசு நியமித்த கமிட்டியை தனியார் பாலிடெக்னிக் அணுக வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
கட்டண விவகாரம் தொடர்பாக, அரசு நியமித்துள்ள கல்வி கட்டண
ம் நிர்ணய குழுவை அணுகும்படி தனியார் பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கல்வி கட்டணம்
தமிழ்நாடு அரசு உதவி பெறாத பாலிடெக்னிக் கல்லூரிகள் நிர்வாகிகள் சங்கம் ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தது.
அதில் கூறப்பட்டு இருந்ததாவது:–
2002–ம் ஆண்டு தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட்டது. அதன்படி, அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கு ரூ.6,500 என்றும், நிர்வாக இடஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கு ரூ.21 ஆயிரத்து 700 எனவும் நிர்ணயம் செய்தது. இதன்பின்னர், 2003–ம் ஆண்டு அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் என்றும், நிர்வாக இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு ரூ.30 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்தது.


பழைய கட்டணம்
இந்த நிலையில், கடந்த 2012–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11–ம் தேதி எஸ்.சி. மற்றும் எஸ்.டி. நலத்துறை ஒரு அரசாணை வெளியிட்டது. அதில், எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கக்கூடாது. அந்த கட்டணத்தை அரசு வழங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், 2002–ம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட பழைய கட்டண தொகையையே அரசு வழங்கி வருகிறது. இதுகுறித்து கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

கமிட்டியை அணுக வேண்டும்
இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் சஞ்சய்காந்தி, பாலிடெக்னிக் கல்லூரி கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்ய ஐகோர்ட்டு ஓய்வுப்பெற்ற நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் தலைமையில் கமிட்டியை தமிழக அரசு அமைத்துள்ளது. அந்த கமிட்டி நிர்ணயம் செய்யும் கட்டணத்தை தனியார் பாலிடெக்னிக் கல்லூரிக்கு வழங்க எஸ்.சி. மற்றும் எஸ்.டி. நலத்துறை தயாராக உள்ளது என்று வாதிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுதாரர் சங்கத்தை, கட்டண நிர்ணய கமிட்டியை அணுகும்படி உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு