Skip to main content

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நாளை தொடங்குகிறது


வேலூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.


இதுகுறித்து கலெக்டர் நந்தகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–


இலவச பயிற்சி வகுப்பு
வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி–2–க்கான (டி.என்.பி.எஸ்.சி –சி.சி.எஸ்.இ.–2 –2015) தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்களில் மட்டும் நடக்கிறது.


இந்த சிறப்பு பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ–மாணவிகள் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த பயிற்சி வகுப்புகள் சிறந்த ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வகுப்பு நடக்கிறது.

புத்தகங்கள்
பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவ– மாணவிகள் அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், சோளிங்கர், வாலாஜா, ஆற்காடு, திமிரி, கணியம்பாடி, வேலூர், காட்பாடி, கே.வி.குப்பம், மாதனூர், அணைக்கட்டு, குடியாத்தம், பேரணாம்பட்டு, ஆலங்காயம், திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை மற்றும் கந்திலி ஆகிய 20 பஞ்சாயத்து அலுவலகங்களில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்ட நூலகங்களை அணுகி, போட்டி தேர்வுக்கான புத்தகங்களை பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு