Skip to main content

இறந்த ஊழியரின் சகோதரருக்கு கருணை அடிப்படையிலான பணி வழங்க உத்தரவு


மின்வாரிய ஊழியர் இறந்ததால், கருணை அடிப்படையில் அவரது சகோதரருக்கு பணி வழங்குமாறு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பி. பாண்டிசெல்வம் என்பவர் தாக்க
ல் செய்த மனு விவரம்: எனது அண்ணன் பி. பாலகிருஷ்ணன் மின்வாரியத்தில் வயர் மேனாக பணியாற்றினார். தாய், தந்தை இறந்த பிறகு, அவர் தான் குடும்பத்தை கவனித்து வந்தார். அவருக்கு திருமணமாகவில்லை.
இந்நிலையில், 2004ஆம் ஆண்டு பணியில் இருந்தபோது இறந்துவிட்டார். அவருக்கு திருமணமாகாததால் நேரடி வாரிசுகள் இல்லாத நிலையில், எனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரி 2007 ஜூலை 30இல் விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பத்தை, மதுரை பெருநகர் மின்பகிர்மான கண்காணிப்புப் பொறியாளர் 2007 ஆகஸ்ட் 14இல் நிராகரித்தார். நேரடி சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு மட்டுமே பணி வழங்கமுடியும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை 1998ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணைப்படி, ஊழியர் ஒருவர் பணியில் உள்ளபோது இறந்தால், கருணை அடிப்படையில் அவரது திருமணமாகாத சகோதரர் அல்லது சகோதரிக்கும் பணி வழங்க பரிசீலிக்கலாம். எனவே, எனது மனுவை பரிசீலித்து பணி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனுவுக்கு மின்வாரியம் அளித்த பதிலில், திருமணமாகாத சகோதரர் அல்லது சகோதரிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கலாம் என்ற அரசு உத்தரவை, மின்வாரியம் 2008 ஆகஸ்ட் 18 லிருந்துதான் செயல்படுத்தி வருகிறது. எனவே, அதற்கு முன்பு உயிரிழந்த ஊழியரின் சகோதரருக்கு பணி வழங்க இயலாது எனத் தெரிவித்தது.
மனுவை விசாரித்த நீதிபதி வி.எம். வேலுமணி பிறப்பித்த உத்தரவு: கருணை அடிப்படையிலான பணி தொடர்பான அரசு உத்தரவு 1998இல் வெளியாகியுள்ளது. மனுதாரரின் சகோதரர் 2004இல் இறந்துள்ளார். 2007இல் கருணை அடிப்படையிலான பணி கோரி மனுதாரர் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில், அரசு உத்தரவை 2008ஆம் ஆண்டில்தான் அமல்படுத்தியுள்ளதாகக் கூறி, மனுதாரருக்கு பணி வழங்க மின்வாரியம் மறுத்துள்ளது.
மனுதாரர் திருமணமாகாதவர் என்பதையும், அவருக்கு பணியாற்ற தகுதி இருப்பதையும் மின்வாரியம் மறுக்கவில்லை. மேலும், மனுதாரர் வசதியாக வாழ்பவர் எனவும் கூறவில்லை. மனுதாரர்தான் இறந்தவருக்கு ஒரே வாரிசாக உள்ளார். எனவே, மனுதாரரின் மனுவை மீண்டும் பரிசீலித்து, 8 வாரங்களில் மின்வாரியம் முடிவு செய்யவேண்டும். இந்த உத்தரவை மற்ற வழக்குகளில் முன் உதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு