Skip to main content

ஐ.சி.ஐ.சி.ஐ., யின் மொபைல் போன் வங்கி


மும்பையில் இளம் தலைமுறையினருக்கான மொபைல் போன் வங்கி சேவையை ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி நேற்று துவக்கியது.
'இ-வால்ட் பாக்கெட்ஸ்' என்ற பெயரில் அறிமுகமான இதன் மூலம் வங்கி கணக்கு இல்லாதவர்களும் ஆன்லைனில் பணப் பரிவர்த்தனை எளி
தில் மேற்கொள்ளலாம். மேலும் பேஸ்புக் மற்றும் வங்கி கணக்குகள் வைத்திருக்கும் நண்பர்களுக்கு இமெயில், மொபைல் போன் மூலம் அதிகபட்சமாக ரூ.?? ஆயிரம் வரை உடனடியாக பணப்பரிவர்த்தனை செய்ய முடியும்.
அதற்கு மேல் தேவைப்படும் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் புதிதாக கணக்கு துவங்கியோ அல்லது ஏற்கெனவே உள்ள வங்கி கணக்கை இத்துடன் இணைத்து பரிவர்த்தனைக்கு பயன்படுத்தலாம். ஆன்லைனில் விசா கார்டை பயன்படுத்தும் முறையில் உள்ள அனைத்து வசதிகளும் இதில் உள்ளன. இந்த வசதியை பெற விரும்புவோர் 'கூகுல் பிளே ஸ்டோருக்குள்' சென்று கணக்கு துவங்கி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 'ஜீரோ பேலன்ஸ்' வசதியும் உள்ளது. இதை துவக்கி வைத்து வங்கி தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் கூறுகையில்,''இன்றைய இளைஞர்களுக்கு போகிற போக்கில் அனைத்து விஷயங்களும் நடக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். மொபைல் போன் கட்டணம், ரீசார்ஜ் உள்ளிட்டைவைகளை எளிதில் செலுத்த இந்த 'பாக்கெட்' பயன்படும். எதிர்காலத்தில் டிஜிட்டல் முறை பணம் செலுத்தும் வசதி மேலும் நவீனமாக்க இது உதவும், என்றார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு