Skip to main content

மாறுகிறது பாலிடெக்னிக் கல்லூரி பாடத்திட்டம்


தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கத்திற்கு உட்பட்ட அரசு, உதவிபெறும் மற்றும் சுயநிதிப் பிரிவு பாலிடெக்னிக்குகளில் மின்னணுவியல், தொடர்பியல் துறைக்கான பாடத் திட்டம் 2011-12ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில்
மாற்றம் கொண்டுவர உசிலம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஜெகநாதன் தலைமையில் பேராசிரியர் குழு ஏற்படுத்தப்பட்டது. மதுரையில் இக்குழு நேற்று
ஆய்வு நடத்தியது. மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் பேராசிரியர்கள் 40 பேர் பங்கேற்றனர். ஜெகநாதன் கூறுகையில் "மின்னணுவியல் டெஸ்டிங், அதிக திறன் வளர்க்கும் கணினி பிரிவு பாடங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். கோவை, திருச்சி, நெல்லையிலும் ஆய்வு நடந்தது. இதன் முடிவு பாடத் திட்ட கமிட்டியிடம் ஆகஸ்ட்டில் தாக்கல் செய்யப்படும்" என்றார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா