தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கத்திற்கு உட்பட்ட அரசு, உதவிபெறும் மற்றும் சுயநிதிப் பிரிவு பாலிடெக்னிக்குகளில் மின்னணுவியல், தொடர்பியல் துறைக்கான பாடத் திட்டம் 2011-12ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில்
மாற்றம் கொண்டுவர உசிலம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஜெகநாதன் தலைமையில் பேராசிரியர் குழு ஏற்படுத்தப்பட்டது. மதுரையில் இக்குழு நேற்று
ஆய்வு நடத்தியது. மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் பேராசிரியர்கள் 40 பேர் பங்கேற்றனர். ஜெகநாதன் கூறுகையில் "மின்னணுவியல் டெஸ்டிங், அதிக திறன் வளர்க்கும் கணினி பிரிவு பாடங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். கோவை, திருச்சி, நெல்லையிலும் ஆய்வு நடந்தது. இதன் முடிவு பாடத் திட்ட கமிட்டியிடம் ஆகஸ்ட்டில் தாக்கல் செய்யப்படும்" என்றார்.