Skip to main content

அரசுப் பள்ளிச் சுவர்களில் சித்திரங்கள் வரைய நிதி ஒதுக்கீடு


சிவகங்கை மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி  இயக்கம் சார்பில், 250 அரசு நடுநிலைப் பள்ளிச் சுவர்களில் கல்வி தொடர்பான வண்ணச் சித்திரங்கள் வரைய ரூ. 4 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சிவகங்கை மாவட்டக் கூடுதல் முதன்மைக் கல்வி
அலுவலர் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) அ. வசந்தி கூறியது: மாணவர்களிடையே போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல், குழந்தைகளின் இன்றைய கல்வி, நாளைய வாழ்க்கை என்பதன் அவசியத்தை உணர்த்தும் விதமாக பள்ளிச் சுவர்களில் வண்ணச் சுவர் சித்திரங்கள் வரைதல், இலவசக் கட்டாயக் கல்வி
உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துதல், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடத்தில் வண்ணச் சுவர் சித்திரங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியன திட்டமிடப்பட்டுள்ளன.  இதற்காக, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 250 அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும்
எஸ்.புதூர் உலகம்பட்டியில் உள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளி ஆகியவற்றில், வண்ணச் சுவர் சித்திரங்கள் வரைய பள்ளி ஒன்றுக்கு ரூ.1600 வீதம் மொத்தம் 251 பள்ளிகளுக்கு ரூ. 4 லட்சத்து ஆயிரத்து 600 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு