Skip to main content

மாணவர்களுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறியா?ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி துறை அறிவுரை


சென்னை:'மாணவ, மாணவியருக்கு, டெங்கு, பன்றிக் காய்ச்சல் அறிகுறி தென்பட்டால், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவிப்பதுடன், பெற்றோருக்கும் அறிவிக்க வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்
வி இயக்குனர், கண்ணப்பன் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில்
கூறியிருப்பதாவது:* பள்ளிக் குழந்தைகள் சுகாதாரமான பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். இதன்படி, அவ்வப்போது கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்; உணவு உண்பதற்கு முன், கைகளை கழுவ வேண்டும்.
* வகுப்பறைகளை சுத்தமாகவும், ஒழுங்காகவும் வைத்திருக்க வேண்டும். வகுப்பறை, கழிவறையை சுற்றி தண்ணீர் தேங்கினால், உடனடியாக தலைமை ஆசிரியருக்கு, மாணவ, மாணவியர் தெரிவிக்க வேண்டும். 


விழிப்புணர்வு
* கொசு பெருக்கத்தை தடுக்க, குடிநீர் பானைகள், தண்ணீர் தொட்டிகளை மூட வேண்டும். 
* டெங்கு, பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வை, மாணவ, மாணவியரிடம் ஏற்படுத்த வேண்டும். 
* மாணவ, மாணவியருக்கு, கடுமையான காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால், ஆரம்ப சுகாதார மையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்; பெற்றோருக்கும் அறிவுறுத்த வேண்டும்; சுய மருத்துவத்தை தவிர்க்க வேண்டும்.
* வரும் 10ம் தேதி, குடற்புழு நீக்க நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்று அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில், குடற்புழு நீக்க மருந்து பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும்; விடுபட்ட குழந்தைகளுக்கு, 13ம் தேதி சிறப்பு முகாம் நடக்கும். 
* இதை, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா