Skip to main content

மாணவர்கள் தேர்வு எழுதும் போது செய்யக்கூடியவை என்ன? , செய்யக் கூடாதவை என்னென்ன?

பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதும் போது செய்யக்கூடியவை என்ன? , செய்யக் கூடாதவை என்னென்ன? - தேர்வுத்துறை அறிவிப்பு
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும் போது என்னென்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்பதை தேர்வு
த்துறை  தெளிவுபடுத்தியுள்ளது.

செய்யக்கூடியவை என்ன?

* விடைத்தாளின் முகப்பு சீட்டில் உரிய இடத்தில் மாணவர்கள் கையொப்பமிட வேண்டும்.
* விடைத்தாளில் ஒரு பக்கத்தில் 20 முதல் 25 வரிகள் வரை எழுத வேண்டும்.
* விடைத்தாளின் இரு புறத்திலும் எழுத வேண்டும். 
* முறைகள் எல்லாம் விடைத்தாளின் பகுதியில் இடம்பெற வேண்டும். 
* கேள்வியின் எண் தவறாமல் எழுத வேண்டும்.
* இரு விடைகளுக்கு இடையே இடைவெளி விட்டு எழுத வேண்டும். 
*  வினாத்தாளின் வரிசை (ஏ அல்லது பி) மதிப்பெண்களுக்கான பக்கத்தில் குறிப்பிட வேண்டும். 
* விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு மை பேனாக் களால் விடைகளை தெளிவாக எழுத வேண்டும். 
* விடைத்தாளில் எதுவும் எழுதாத பக்கங்களில் குறுக்கு கோடு இட வேண்டும்.

செய்யக் கூடாதவை என்னென்ன? 

* வினாத்தாளில் எந்தவித குறியீடும் இடக்கூடாது.
* விடைத்தாளை சேதப்படுத்தக் கூடாது.
* விடைத்தாளில் எந்த ஒரு பக்கத்திலும் தேர்வு எண் அல்லது பெயர் எழுதக் கூடாது.
* கலர் பேனா, பென்சில் எதையும் பயன்படுத்தக் கூடாது. 
* விடைத்தாளில் உள்ள (மார்ஜின்) கோட்டின் இடது மற்றும் வலது ஓரத்தில் எழுதக்கூடாது. 
* விடைத்தாள் புத்தகத்தின் எந்த தாளையும் கிழிக்கவோ அல்லது நீக்கவோ கூடாது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு