Skip to main content

அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்கு சேவை வரி வசூல்: பொதுமக்கள் அதிருப்தி


இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை (எல்.ஐ.சி.) தொடர்ந்து, அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்கும் ஜனவரி மாதம் முதல் சேவை வரி வசூல் செய்யப்படுவது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அஞ்சல் துறையில், கடந்த 1884-ஆம் ஆண்டு முதல் அஞ்சலக
ஆயுள் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமப் புறங்களிலும், இந்தத் திட்டம் 1995-ஆம் ஆண்டு "கிராமப்புற அஞ்சலக ஆயுள் காப்பீடு' என்ற பெயரில் விரிவுப்படுத்தப்பட்டது.
நாடு முழுவதும் அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 2013-14 நிலவரப்படி 54,06,093 கணக்குகளும், கிராமப்புற அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1,50,14,314 கணக்குகளும் உள்ளன.
தமிழகத்தில் அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1,127 கோடி. இதன் கீழ் கணக்கு வைத்துள்ளவர்கள், ஜனவரி மாதம் தங்களுக்கான காப்பீட்டுத் தொகையை (பிரீமியம்) செலுத்தும் போது, சேவை வரியும் சேர்த்து வசூலிக்கப்பட்டது.
அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்கு, முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் சேவை வரி வசூலிக்கப்பட்டது, பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே 2007-ஆம் ஆண்டுக்கு முன்னர் சேவை வரி வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சேவை வரி வசூலிக்கப்பட்டதில் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்ட கணக்கு வைத்துள்ள முத்துக்கிருஷ்ணன் கூறியதாவது:
பிப்ரவரி மாதத்துக்கான ஆயுள் காப்பீட்டுத் தொகையைச் செலுத்தும்போது, காப்பீட்டுத் தொகையில் 1.54 சதவீதம் சேவை வரியை அஞ்சல் துறை வசூலித்தது. சேவை வரி வசூலிப்பது தொடர்பான எந்தவொரு முன்னறிவிப்பும் கிடையாது.
அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்கு சேவை வரி வசூலிப்பதைத் திரும்பப் பெற வேண்டும் என்றார் அவர்.
இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்.ஐ.சி.) ஏற்கெனவே சேவை வரி வசூலித்து வருகிறது. தற்போதுதான் அஞ்சல் துறை சேவை வரியை வசூலிக்கத் தொடங்கியுள்ளது.
ஆயுள் காப்பீட்டுக் கணக்கு தொடங்கிய முதல் ஆண்டில் மாதம்தோறும் செலுத்தும் காப்பீட்டுத் தொகையில் 3.09 சதவீதம் சேவை வரி வசூலிக்கப்படும். இரண்டாவது ஆண்டு முதல் 1.54 சதவீதம் சேவை வரி மட்டுமே வசூலிக்கப்படும்.
இதுதொடர்பான அறிவிப்பை, கடந்தாண்டு டிசம்பர் மாதமே அஞ்சலகங்களில் தகவல் பலகைகள் வெளியிட்டிருந்தோம். மேலும், ஊடகங்களிலும், நாளேடுகளிலும் அறிவிப்பு வெளியிட்டிருந்தோம் என்றார் அவர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு