Skip to main content

பட்ஜெட்டில் என்னென்ன தேவை? இயக்குனர்களிடம் கருத்து கேட்பு


தமிழக பட்ஜெட்டில், பள்ளிக்கல்வித் துறைக்குத் தேவையான திட்டங்கள் குறித்து, துறை இயக்குனர்களிடம், அரசு கருத்து கேட்டுள்ளது.

ஆண்டுதோறும், பட்ஜெட் கூட்டத்தொடர் கூடும் முன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் நிதித் துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை செயலகம்
சார்பில், கருத்துரு கேட்கப்படும். இந்த ஆண்டு கல்வித் துறைக்கு, பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் முக்கியமாக இடம் பெற வேண்டும் என, கல்வித் துறை அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டது; இதற்காக, கருத்துக் கேட்பு ஆலோசனைக்
கூட்டம் நடந்தது. பள்ளிக்கல்வி முதன்மை செயலர் சபிதா தலைமையிலான கூட்டத்தில், இயக்குனர்கள் கண்ணப்பன், ராஜன், அறிவொளி, பிச்சை, பூஜா குல்கர்னி, முருகன், இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், துறை செயல்பாடுகளை கணினி மயமாக்க நிதி ஒதுக்கீடு; வகுப்பறைகளுக்கு உபகரணங்கள் வாங்குதல்; மத்திய பாடத் திட்டத்துக்கு இணையாக, நவீன தொழில்நுட்பம் மற்றும் பாடத்திட்டங்களை ஆய்வு செய்தல்; ஆய்வுப் பிரிவு உருவாக்குதல் போன்ற பல்வேறு அறிவிப்புகளுக்கு, இயக்குனர்கள் கோரிக்கை விடுத்து, கருத்துரு அளித்துள்ளனர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா