Skip to main content

டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் பார்வையாளர்களுக்கு தடை


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி.,யின் பணிகளில், இடைத்தரகர் குறுக்கீடுகளைக் குறைக்க, டி.என்.பி.எஸ்.சி., தலைமை அலுவலகத்தில், பார்வையாளர் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசுத் துறை காலிப் பணியிடங்களுக்கு, குரூ
ப் - 1, 2 உள்ளிட்ட போட்டித் தேர்வுகள், நீதிமன்றப் பணியிட தேர்வுகள், டி.என்.பி.எஸ்.சி., மூலம் நடத்தப்படுகிறது. கடந்த காலங்களில், டி.என்.பி.எஸ்.சி., தேர் வில், வினாத்தாள் கசிவு, விடைத்தாள் காணாமல் போவது, இடைத்தரகர் ஆதிக்கம் போன்ற புகார்கள் எழுந்தன.

எனவே, கடந்த சில மாதங்களாக, டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகப் பணிகள் கணினி மயமாக்கப்பட்டு, வெளிப்படை யான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனாலும், தேர்வு முடிவுகள் வெளியிடும் போதும், தகுதிப்பட்டியல் தயாரித்தல், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு, இடஒதுக்கீடு முறையை பின்பற்றுதல், சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு போன்ற பல நடவடிக்கைகளில், சில தனிநபர் தலையீடு இருப்பதாக, அவ்வப்போது புகார்கள் வருகின்றன.

இதை கருத்தில் கொண்டு, டி.என்.பி.எஸ்.சி., தலைமை அலுவலகத்துக்குள், பார்வையாளர் நுழையத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஆணைய தலைவர், செயலர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆணைய உறுப்பினர்கள், இணை மற்றும் துணைச் செயலர் என, எந்த அதிகாரியையும், வெளியாட்கள் சந்திக்க அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.முன் அனுமதி பெற்று வருபவர்களும், மாலை 4:00 மணி முதல், 5:00 மணிக்குள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். அனைத்து பாதைகளும் மூடப்பட்டு, அலுவலர்களுக்கு தனிப்பாதையும், முன் அனுமதியின் பேரில் வருவோருக்கு, வரவேற்பறை அருகில் தனிப்பாதையும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

சிபாரிசை தடுக்க...இதுகுறித்து, தேர்வாணைய உயரதிகாரிகள் சிலர் கூறியதாவது:
வெளியாட்களை உள்ளே அனுமதிப்பதால், அலுவலகப் பணிகள் பாதிப்பதுடன், பணி நியமன நடவடிக்கைகளில், அரசியல்வாதிகள் சிபாரிசுக்கு வரும் வாய்ப்புள்ளது.
இதனால், முறைப்படி விண்ணப்பித்து தேர்வு எழுதுவோர் பாதிக்கப்படுவதுடன், ஆணையத்தின் மீதான தேர்வர்களின் நம்பிக்கையும், தவறாகத் திசை திருப்பப்படும் நிலை உள்ளது.
இதை தடுக்க, பார்வை யாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா