Skip to main content

நிலுவைத் தொகை எதிர்பார்க்கும் பகுதி நேர ஆசிரியர்கள்

பகுதி நேர ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வுநிலுவைத்தொகை வழங்கப்படாததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.2011-12ல் 16 ஆயிரத்து 549 பகுதி நேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது. வாரத்தில் மூன்
று நாள், நாள் ஒன்றுக்கு மூன்று மணி நேரம் பணி. இவர்களுக்கு 2014 ஏப்ரல் முதல் ரூ.7 ஆயிரம் சம்பளம் உயர்த்தி அக்டோபரில் அரசாணை வெளியிடப்பட்டது. முந்தைய மாதங்களுக்குரிய தொகை நிலுவையாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. டிசம்பர் மாதத்துக்கு பிறகு ரூ.7 ஆயிரம் சம்பளம் பெற்று வருகின்றனர். ஏப்ரல் முதல் அக்டோபர் வரை உள்ள, நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை.பகுதி நேர சிறப்பாசிரியர் சங்க சிவகங்கை மாவட்ட தலைவர் குமரேசன் கூறும்போது: கடந்த ஆண்டு சம்பளம் உயர்த்தி வழங்க அரசு உத்தரவு பிறப்பித்தது. நிலுவை தொகை உடனடியாக வழங்கப்படும் என அறிவித்தனர்.

இதுவரை வழங்கவில்லை. சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட பிறகு பள்ளிகளில் விளையாட்டு திறன், இசை திறன், ஓவியத்திறன் வளர்ச்சி அடைந்துள்ளது. எனவே, எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், என்றார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்