Skip to main content

வி.ஏ.ஓ.க்கள் பதவி உயர்வில் புதிய நடைமுறை: தமிழக அரசு உத்தரவு

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு (வி.ஏ.ஓ.) பதவி உயர்வு வழங்குவதற்கான புதிய உத்தரவை தமிழக அரசு வெளியிட்டது.இதன்படி, பதவி உயர்வுக்கான தகுதியாக 6 ஆண்டுகள் வி.ஏ.ஓ., பணியை நிறைவு செய்தாலே போதும்.

இதுகுறித்து வருவாய்த் துறை செயலாளர் ஆர்.வெங்கடேசன்
வெளியிட்ட உத்தரவு:

கிராம நிர்வாக அலுவலர்களாக இருப்பவர்களில் 10 ஆண்டுகள் பணியைமுடித்திருந்து உரிய கல்வித் தகுதியைப் பெற்றிருந்தால், அவர்களுக்கு மாவட்ட வருவாய்ப் பிரிவுகளில் ஏற்படும் உதவியாளர் காலியிடங்களில் 10 சதவீத இடங்கள் பதவி உயர்வின் மூலம் அளிக்கப்படும். இந்தப் பதவி உயர்வு சில நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

இதற்கான உத்தரவு ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வருகிறது.இந்த நிலையில், கிராம நிர்வாக அலுவலர்களுக்குப் பதவி உயர்வு வழங்கும் போது, அவர்கள் 10 ஆண்டுகள் பணியை முடித்திருக்க வேண்டும் என்பதற்குப் பதிலாக 6 ஆண்டுகளாக குறைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்திருந்தது.இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், இதற்கான பரிந்துரைகளை வருவாய் நிர்வாக ஆணையர் தமிழக வருவாய்த் துறைக்கு வழங்கியிருந்தார். அவரதுபரிந்துரைகளை ஏற்று, உதவியாளர் பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்களில் 10 சதவீதத்துக்குப் பதிலாக 30 சதவீத இடங்கள் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஒதுக்கப்படும்.

மேலும், தமிழ்நாடு அமைச்சகப் பணிகளின் விதிகளுக்கு உள்பட்டு கிராம நிர்வாக அலுவலர்கள் உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்யும் நிலையில், அவர்களது பதவி உயர்வை நிர்ணயிக்கும் பதவி காலமானது 10 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளாகக்குறைக்கப்படும்.பதவி உயர்வுக்கான தகுதிகள் திருத்தப்பட்டுள்ள நிலையில், அவை குறித்து தமிழ்நாடு அமைச்சகப் பணிகளின் விதிகளிலும் திருத்தம் செய்ய வேண்டும். எனவே, இதற்கான வரைவு திருத்தங்களை ஒரு மாதத்துக்குள் வருவாய் நிர்வாக ஆணையர் வெளியிட வேண்டும் என்று தனது உத்தரவில் வெங்கடேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு