Skip to main content

எளிய முறை ஆங்கில வாசிப்புத் திறன் பாடத் திட்டம்


ஆரணி அரசுப் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எளிய முறையில் ஆங்கிலப் பாடம் வாசிப்பு திறன் பாடத் திட்டம் திங்கள்கிழமை தொடக்கப்பட்டது.
பாடத் திட்டத்தை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மோகன்
தொடக்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:
ஆங்கில எழுத்துக்கள் 26. இந்த எழுத்துக்களுக்கு 44 உச்சரிப்புகள் உள்ளன.
இந்த உச்சரிப்புகளை மாணவர்களுக்கு எளிய முறையில் பாடத் திட்டம் மூலம் செயல்படுத்தி வருகிறோம். பாடத்தை நடத்த ஆசிரியர்களுக்கு பிப்ரவரி 16 முதல் பிப்ரவரி 23 வரை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பின்னர் மாணவர்களுக்கு கற்றுத் தரப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கு ஆங்கில எழுத்துக்களின் உச்சரிப்புகளை அறிந்து எளிய வழியில் படிக்க வாய்ப்புள்ளது.
இதனால் வெளிநாட்டவர்கள் பேசும் ஆங்கிலத்தை நம் மாணவர்கள் எளிதாக புரிந்துகொள்வார்கள். இந்தப் பயிற்சியினை குறுந்தகடுகள் மூலம் அனைத்துப் பள்ளி ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வாசிப்புத் திறன்
குறித்த புத்தகமும் வழங்கப்படுகிறது என்றார். பள்ளித் தலைமையாசிரியர் பி.மனோகரன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் காமாட்சி, ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு