மும்பையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு: வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
மும்பையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு: வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
ஊதிய உயர்வு, வங்கிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவது
உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை மறுநாள் (பிப்ரவரி 25) முதல் நான்கு நாள்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர்கள் அறிவித்திருந்தனர்.ஊழியர்களை சமரசம் செய்ய ஆணையர் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இதையடுத்து மும்பையில் இன்று வங்கி ஊழியர் சங்கங்களுடன் வங்கிகள் சங்கம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையில் 15 சதவீத ஊதிய உயர்வு வழங்குவதற்கு வங்கிகள் சங்கம் ஒப்புக்கொண்டது. இதையடுத்து ஊழியர் சங்கங்கள் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளன.