Skip to main content

ஃபேஸ்புக்கில் 'உங்கள் புரொஃபைல் பிக்சர்' ஸ்பாம் உஷார்!


பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் கண்களில் விரல்கள் விட்டு ஆட்டுவிக்கும் அம்சங்களில் முன்னிலை வகிப்பது, ஸ்பாம் (SPAM) எனப்படும் 'வேண்டாத தகவல்கள் வேண்டியவர்களுக்கு பரவுதல்'.
சமீபகாலமாக 'ரூ.200 ரீசார்ஜ்' ஸ்பாம் ஆரம்பத்தில் ஆங்கில வ
டிவிலும், பின்னர் அதன் தமிழாக்கத்திலும் ஃபேஸ்புக்கில் அங்கிங்கெனாதபடி எங்கும் உலா வந்துகொண்டிருந்தது. ரூ.200 ரீசார்ஜ்-க்கு ஆசைப்பட்டவர்கள் தங்கள் நட்பு வட்டாரத்துக்கு தங்களை அறியாமலேயே அந்தத் தகவலைப் பரப்பி இம்சித்து வந்தனர்.
இதனிடையே, அழகான பெண்களின் படங்களுடனும், வேறு மாதிரியான படங்களுடனும் ஸ்பாம்கள் வந்தவண்ணம் இருந்தன.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக, ஃபேஸ்புக் பயனாளிகளை புது வகையில் ஆர்வத்தைத் தூண்டி க்ளிக்கிடச் செய்யும் ஒரு ஸ்பாம் பரவி வருகிறது.
அதாவது, ஒரு குறிப்பிட்ட நண்பரிடம் இருந்து இன்பாக்ஸில் 'அட்டாச்சுடு மெசேஜ்' வரும். அதை ஆர்வத்துடன் திறந்தால், நம் புரொஃபைல் பிக்சரைத் தாங்கிய இணைப்பு இருக்கும். அதனால், ஆர்வம் மேலும் மிகுந்து அதை அழுத்தினால் அவ்வளவுதான்... உங்கள் நண்பர்களுக்கெல்லாம் அதேபோன்ற இணைப்பு, உங்களிடம் இருந்து ஸ்பாமாக பரவும்.
பெரும்பாலும் நாம் சம்பந்தப்படாத விஷயங்களை ஸ்பாமாக வந்த நிலையில், நம் புகைப்படத்தைத் தாங்கியே இந்த ஸ்பாம் வைரஸ் போல பரவுவதால், இதில் இணையவாசிகள் எளிதில் சிக்கிவிடுகின்றனர்.
எனவே, ஃபேஸ்புக்கில் உங்கள் புரொஃபைல் பிக்சரைத் தாங்கி, உங்கள் நண்பர்கள் - தோழிகளிடம் இருந்து உள்டப்பிக்குள் இணைப்புத் தகவல் வந்தால், சற்றே உஷாராகி அதைத் தொடாமல் இருப்பதே நன்மை பயக்கும்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு